Wednesday 23 April 2014

மலர மலர மகிழ்ந்துப் போனது பூக்காரி முகம்.

மலர மலர
மகிழ்ந்துப் போனது
பூக்காரி முகம்.

மலர் கருக
வாடிப் போனது
பூக்காரி முகம்.

பூக்காரி வர
மணம் வந்தது
மனம் மகிழ்ந்தது

பூக்காரி போக
மணம் போனது
மனம் வாடிப் போனது

பூக்காரி வர
பூ வாங்க பணம் கேட்டாள் மனைவி
பூக்காரியைப் பார்க்க கடிந்தாள் மனைவி

No comments:

Post a Comment