Wednesday, 11 November 2015

சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவோம்!

தேவை என்றால் மறைந்து விடுகிறது சோம்பல். (laziness, lethargy or sluggishness)
உற்சாகம் குறைவதால் வருவது சோர்வு
சோர்வின் முடிவு சோம்பல்
சரியான தூக்கமின்மை சோர்வைத் தரும்
ஆர்வம் வர சோம்பலுக்கு தீர்வு கிடைக்கும்
வாழ்வின் முன்னேற்றத்திர்க்கு  தடை செய்யும் சோம்பல்!
முயற்சி  சோம்பலை சிதறடிக்கும்

சென்னை செல்வதற்கும் சோம்பி நின்ற மனநிலை சென்னை செல்லும் பயணத்தை தடுத்தது . தொலைபேசியில் அழைப்பு வந்தது
'நீங்கள் சென்னை வந்தால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் ,பொருளும் தருகிறேன் 'என்று.
மனதில் ஒரு வேகம் வந்தது சோம்பல் முறிந்தது .உடன் சென்னை புறப்பட்டேன் .

மகிழ்வான வாழ்க்கையில் காலத்தை நீடித்தல்

பார்க்கும் இடம் புதிதாக இருத்தல்
புதியவர்களிடம் கணிவாகபேசுதல் 

விளையாட்டில் ஆர்வம்
நம்பிக்கையில் உறுதி

இசையை ரசித்தல்
சிறந்த புத்தகத்தை படித்தல்

ஆரோக்கியமான உணவு
நல்லதை மற்றவருக்கு ஏற்றி வைத்தல்


அதிகாலை மகிழ்வான நடை
அந்தி மயங்கும் நேரத்தின் காட்சியை கண்டு ரசித்தல்
விரும்பிய படக்காட்சியை கண்டு மகிழ்தல்

செயல்களில் தைரியம்
செயல்களில் தீவிரம்

செய்த வேலையின் களைப்பை ஓய்வு பெறுதலால் கிடைக்கும் மகிழ்வு 
செய்த வேலையின் சிறப்பான முடிவை நினைத்து மகிழ்தல்

Saturday, 31 October 2015

நான்

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை நேசிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

நான் உண்ணும்போது உன்னை மறந்தேன்
நான் உண்ணும் உணவு உன்னால் கொடுக்கப்பட்டதாய் இருக்க
நான் உன்னை நினைக்கின்றேன் பசியால் வாடும்போது

நான் ஆரோக்கிய நிலையில் இருக்க உன்னை மறந்தேன்
நான் ஆரோக்கிய நிலை குன்றய உன்னருள நாடி உன்னை யாசித்து அழுகின்றேன்

உணர்வுகள் உணர்சிகள்

உணர்வுகள் உணர்சிகள் பல்வகை
உணர்வுகள் உணர்சிகள் மூளையின் வெளிப்பாடு

உணர்வுகள் உணர்சிகள் மனதில் பேசும்
உணர்வுகள் உணர்சிகள் தூண்ட துடிக்கின்றனர்

உணர்வுகள் உணர்சிகள் இயல்பாய் இருக்க மகிழ்வு
உணர்வுகள் உணர்சிகள் இன்பமும் துன்பமும் தரும்

உணர்வுகள் உணர்சிகள் கட்டுபடுத்தப்பட வியாதிகள் வரும்
உணர்வுகள் உணர்சிகள் அஃறினைக்கும் உண்டு

உணர்வுகள் உணர்சிகள் அஃறினையால் (செடி, கொடி,மிருகங்கள்) கட்டுபடுத்தப் படுவதில்லை
உணர்வுகள் உணர்சிகள் உயர்தினையால் கட்டுபடுத்தப் படுகின்றன

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்
நபிகள் நாயகத்தின் பேரர்கள் ஹசன் ,ஹுசன் இருவர்களும் தங்களது சிறு வயதில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதனை கண்ணுற்ற தாய் பாத்திமா மனம் கலங்கி அழுதார்கள்
தங்கள் தாய் அழுவதை கண்ட பிள்ளைகள் தங்கள் சண்டையை நிறுத்தி
தாயிடம் பாசமாக 'ஏனம்மா !அழுகிறீர்கள் ' என்று வருத்தமாக கேட்டார்கள்
'குழந்தைகளை உனக்கு சரியாக வளர்க்கத் தெரியவில்லையே'
என்று அல்லாஹ் கேட்டால் நான் என்ன சொல்வேன்'
என நினைத்து மனம் வருந்துகின்றது என்றார்கள்
அன்னை பாத்திமா அவர்கள் சொன்ன பதில் ஹசன் ,ஹுசன் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது
இனி தங்களுக்குள் சண்டை போடமாட்டோம் என்று அன்னைக்கு ஆறுதல் மொழி சொன்னார்கள்

இஸ்லாத்தில் குழந்தையை சிறப்பாக வளர்ப்பது தாய்க்கு முக்கியமாக கருதப் படுகின்றது

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!
இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும். ஆனால் இறைவன் தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் அவசியம் என்று நம்பினால், இறைவன் உள்ளதையும் நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.
இறைவன் மீது முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.
“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)

தலைமை

தலைமை
தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது.
பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.