Sunday, 7 October 2018
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையற்றவன் இறை நம்பிக்கையற்றவன்
தன்னம்பிக்கையும் ஆர்வமும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
ஆர்வம் உந்துசக்தியை தரும்
உந்துசக்தி முன்னேற்றத்தைத் தரும்
ஆர்வமற்றோர் செயலற்று இருப்பர்
நம்பிக்கை, ஆர்வம்,, பேராவல் முன்னேற்றத்தின் அடித்தளம்
செயலின் ஈடுபாடு முழுமையாக இருத்தல் வேண்டும்
செயலின் ஈடுபாடு வெற்றியின் திறவுகோல்
ஆசைப்படுதல் இயல்பு ஆனால் பேராசைப்படாமல் இருத்தல் வேண்டும்
முயற்சியின் விளைவில் ஏதிர்பார்த்ததும் ஏதிர்பாராததும் கிடைக்கலாம்
அதுவும் நன்மைக்கே இருக்கலாம்
தன்னம்பிக்கை பற்றி திருக்குர் ஆன்
''உங்களில் தன்னம்பிக்கை மிக்க இருபது நபர்கள் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்ளலாம். நூறு நபர்கள் இருந்தால், ஆயிரம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.'' [அல்குர் ஆன் -8.65]
Wednesday, 26 September 2018
Tuesday, 18 September 2018
ஒரு பக்தனின் நன்றியுணர்வு
மழை
பனி
குளிர்
வெயில்
இவைகளுக்கு தாக்குப்பிடிக்க மட்டுமா ஆடை ?
அனைத்துக்கும் மேலாக மானத்தை பாதுக்காக்கும் ஆடை.
ஆடை அணிவது நாகரீகத்தின் வெளிப்பாடு .
வார்த்தைகளால் சொல்வது மட்டும் நன்றி அல்லது வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமோ ?
அது வெளிப்படும் இடம் உள்ளத்தின் நாதமாக இருத்தல் வேண்டும் .
இறைவா ! உன்னை நினைத்து உருகியவனாய் நன்றியுடையவனாய் இருப்பேன் .
அதனை மறைமுகமாகவும் .வெளிப்படையாகவும்
சொற்களினால் மற்றும் செயல்களால் வெளிப்படுத்தி
உன்னிடம் இறைஞ்சி நிற்ப்பேன்
அதற்கு உனது அருளும் அங்கீகாரமும் வேண்டும்
நன்றியுணர்வு இதயத்திலிருந்து தொடங்கி நாக்கு நரம்பு மண்டலத்திலிருந்து வெளிப்படுகின்றது
Thursday, 13 September 2018
தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவு
திருமணத்தின் முதல் ஆண்டில், கலாச்சாரங்கள் மற்றும் சூழல்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக மோதல்கள், வீட்டில் உள்ள அதிகாரத்தை சுற்றி சுழலும்,
தம்பதிகளுக்கு இடையே இன்னும் சுதந்திரம், உரிமை.பெற முயற்சிக்கும் போது கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் உருவாகும் .ஒவ்வொருவருக்கும் அவர்களது உரிமைகள் தெரிந்திருந்தால் மட்டுமே, மோதல்கள் முடிவடையும், திருமணத்தின் முதல் வருடம் தேனிலவு காலங்களில் அப்பொழதுக்கு மாற்றங்கள் உருவாகலாம்
பொதுவாக மோதல்கள், வீட்டில் உள்ள அதிகாரத்தை சுற்றி சுழலும்,
தம்பதிகளுக்கு இடையே இன்னும் சுதந்திரம், உரிமை.பெற முயற்சிக்கும் போது கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் உருவாகும் .ஒவ்வொருவருக்கும் அவர்களது உரிமைகள் தெரிந்திருந்தால் மட்டுமே, மோதல்கள் முடிவடையும், திருமணத்தின் முதல் வருடம் தேனிலவு காலங்களில் அப்பொழதுக்கு மாற்றங்கள் உருவாகலாம்
Monday, 10 September 2018
Friday, 24 August 2018
Subscribe to:
Posts (Atom)


