Saturday 31 October 2015

நான்

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை நேசிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

நான் உண்ணும்போது உன்னை மறந்தேன்
நான் உண்ணும் உணவு உன்னால் கொடுக்கப்பட்டதாய் இருக்க
நான் உன்னை நினைக்கின்றேன் பசியால் வாடும்போது

நான் ஆரோக்கிய நிலையில் இருக்க உன்னை மறந்தேன்
நான் ஆரோக்கிய நிலை குன்றய உன்னருள நாடி உன்னை யாசித்து அழுகின்றேன்

உணர்வுகள் உணர்சிகள்

உணர்வுகள் உணர்சிகள் பல்வகை
உணர்வுகள் உணர்சிகள் மூளையின் வெளிப்பாடு

உணர்வுகள் உணர்சிகள் மனதில் பேசும்
உணர்வுகள் உணர்சிகள் தூண்ட துடிக்கின்றனர்

உணர்வுகள் உணர்சிகள் இயல்பாய் இருக்க மகிழ்வு
உணர்வுகள் உணர்சிகள் இன்பமும் துன்பமும் தரும்

உணர்வுகள் உணர்சிகள் கட்டுபடுத்தப்பட வியாதிகள் வரும்
உணர்வுகள் உணர்சிகள் அஃறினைக்கும் உண்டு

உணர்வுகள் உணர்சிகள் அஃறினையால் (செடி, கொடி,மிருகங்கள்) கட்டுபடுத்தப் படுவதில்லை
உணர்வுகள் உணர்சிகள் உயர்தினையால் கட்டுபடுத்தப் படுகின்றன

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்
நபிகள் நாயகத்தின் பேரர்கள் ஹசன் ,ஹுசன் இருவர்களும் தங்களது சிறு வயதில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதனை கண்ணுற்ற தாய் பாத்திமா மனம் கலங்கி அழுதார்கள்
தங்கள் தாய் அழுவதை கண்ட பிள்ளைகள் தங்கள் சண்டையை நிறுத்தி
தாயிடம் பாசமாக 'ஏனம்மா !அழுகிறீர்கள் ' என்று வருத்தமாக கேட்டார்கள்
'குழந்தைகளை உனக்கு சரியாக வளர்க்கத் தெரியவில்லையே'
என்று அல்லாஹ் கேட்டால் நான் என்ன சொல்வேன்'
என நினைத்து மனம் வருந்துகின்றது என்றார்கள்
அன்னை பாத்திமா அவர்கள் சொன்ன பதில் ஹசன் ,ஹுசன் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது
இனி தங்களுக்குள் சண்டை போடமாட்டோம் என்று அன்னைக்கு ஆறுதல் மொழி சொன்னார்கள்

இஸ்லாத்தில் குழந்தையை சிறப்பாக வளர்ப்பது தாய்க்கு முக்கியமாக கருதப் படுகின்றது

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!
இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும். ஆனால் இறைவன் தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் அவசியம் என்று நம்பினால், இறைவன் உள்ளதையும் நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.
இறைவன் மீது முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.
“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)

தலைமை

தலைமை
தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது.
பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

பெண்ணில்லா உலகில் வாழ்வேது

பெண்ணின் படைப்பு உயர்வானது
பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின் பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது

இறைவன் கொடுத்த சட்டங்கள் நிலையானது, குறை இல்லாதது மற்றும் இதனை மாற்ற முடியாதது. நன்மைகள் தரக் கூடியது .

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம். பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

காலத்தின் மாற்றம்,

நாம் வாழும் காலம் மறுமலர்ச்சி காலம், இங்கு என்ன புரட்சியா நடந்துவிட்டது? எகிப்தில் கமால் பாட்சா புரட்சி வழி கொண்டு பெண்களுக்கு உரிமை கொடுத்து மாற்றம் கொடுத்தார் . இஸ்லாம் அனைத்து உரிமையும் பெண்களுக்கு தந்திருந்தபோதும் அதனை முறையே பயன்படுத்தாமல் ஒரு சிலரின் தவறான பிரசங்கத்தினால் பெண்களை கல்வி கற்க விடாமல் செய்து வீட்டிற்குள் முடக்கி விட்டோம். தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் வர பெண்களும் உயர் கல்வி பெற்று வருகின்றனர்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பணம் பணம் பண்ணுகின்றது. முதலில் பணத்தை சேர்த்துக் கொள் பின் அனைத்தும் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். பணம் பத்தும் செய்யும். பழம் உள்ள மரத்தினை நாடி பறவைகளும் பறந்து வருவது போல் பாசமும், அன்பும் மற்ற அனைத்தும் பணம் வரும்போது உன்னுடன் ஓடி வரும்.
பணம் வந்தது நேர்மையான உழைப்பினால் மட்டும் வந்தது என்பது உண்மையாக இருக்க முடியாது. பணம் வர தவறான பல வகைகளும் கையாளப்படுகின்றன. பணத்தினால் நல்ல செயல்களும் மற்றும் பாவமான செயல்களும் செய்யப்படுகின்றன. பணம் வந்த வழியினை கேட்டால் உண்மையை யாரும் சொல்லமாட்டார்கள். அது தனது திறமையால் வந்தது என பெருமை பேசுவார்கள். பணம் பேசுவதால் அதனை 'ஆமாம்' போட்டு ஒத்துக் கொள்வார்கள்.

Sunday 4 October 2015

நீடூர் - நெய்வாசல்

                           நீடூர் - நெய்வாசல்

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

இந்நீடூர் இராஜாதி ராஜவள  நாட்டைச் சேர்ந்ததாகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது

                                நீடூர் தொடர்வண்டி நிலையம்


.