Saturday 30 August 2014

நடிப்பவரோடு சேர்ந்து நடிக்க மனம் இடம் தரவில்லை

அழுததைப் பார்த்து
மனம் நொந்தது
அழுபவரை அமைதிப் படுத்த முயன்றேன்

அழுவது போல் பாவனை செய்தாள்
மனம் சிரித்தது
அழுபவள் அழும் பாவனை
அடங்கும் வரை
கண்டு கொள்ளவில்லை

அழும் பாவனைக்கு
அழும் நடிப்புக்கு
ஆறுதல் சொன்னால்
அவசியமற்ற
செலவாகுமென
அறிந்துக் கொண்டேன

Thursday 28 August 2014

பெண் பார்க்க வந்தாயோ! பொருள் அடைய வந்தாயோ!

எம்மை பார்க்க வந்தாய்
எம்மீது போர்த்தப் பட்ட பொருளைப் பார்க்கிறாய்
எம்மை சுற்றியுள்ள பொருளைப் பார்க்கிறாய்
உம்மோடு வந்தவர்களும்
உமது குணத்தோடு ஒன்றி உள்ளனர்
உங்கள் செயல் வெட்கப் படுவதாய் இருக்க
உம்மைப் பாராமலேயே
நான் வெட்கத்துடன் நின்றேன்

மறைப்பதேன் !

 
மறைப்பதென்ன மகனே
ஒன்றுமில்லை அம்மா

கையில் ஒரு பை
பையில் ஒரு பொட்டலம்
மகனின் செயல் தாய்க்கு தெரியாதா
வாங்கியது தான் வாங்கினாய்
வாங்கியதில் கொஞ்சம் சேர்த்து வாங்கலாமே
சேர்த்து வாங்கியிருந்தால்
உனது மனைவிக்கு கொடுப்பதோடு
உனது சகோதரிகளுக்கும் சேர்த்து கொடுக்கலாமே

நீயும் உன் மனைவியும் மகிழ்வதோடு இருக்க
உங்களோடு சேர்ந்து அனைவரும் மகிழ்வார்களே

பூவும் இனிப்பும் யாவரும் விரும்பும் பொருளாக இருக்க
பகிர்ந்து கொடுக்க யாவரும் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள்

Monday 25 August 2014

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர

உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை
உன் உடல் அசைவு தரவில்லை

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்


.பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்க ...

செய்தி துறையை ,பத்திரிகை துறையை ஆள்பவர்கள் முதலாளிகளும் (கார்பரேட் நிறுவனங்கள் ) ஆட்சி செய்பவர்க்களுமாக உள்ளார்கள் .
நல்ல மனம் கொண்டவர்கள் பத்திரிகை நடத்தினால் மக்கள் அப் பத்திரிகையை வாங்குவதில்லை .
அதற்க்கு விளம்பரங்களும் கிடைக்காமல் நஷ்டமாகி பத்திரிகை நிறுத்தப் படுகின்றது .
கலைக்கதிர்,மஞ்சரி போன்ற பத்திரிகைகள் செய்த சேவைகள் அதிகம் .ஆனால் அப் பத்திரிகைகள் இப்பொழுது இல்லை .

உன்னைப் பார்த்தாலே அடிமை

உன்னைப் பற்றி உயர்வாய் சிலர் சொன்னார்கள்
உன்னைப் பார்த்தாலே அடிமையாய் விடுவாய் என்று சிலர் சொன்னார்கள்

பலர் பலவிதமாகச் சொல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் அதிகமானது
உன்னிடம் வந்தவுடன் பலர் பலவிதமாகச் சொல்வதிலும் உண்மை இருப்பதாக அறிகின்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்
உன்னைப் பார்த்த பின் பிரிய மனமில்லை

Saturday 23 August 2014

போய் விடு! பொருத்தமானால் வந்து விடு!



உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை பாசத்திற்கு
உன் உடல் அசைவு தரவில்லை தேவையானதிற்கு

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்

Tuesday 19 August 2014

பெரும்பான்மையோரிடம் பெரிய மனப்பான்மை இல்லை



பெரும்பான்மையோரிடம் பெரிய மனப்பான்மை இல்லை
பெரும்பான்மை தாழ்வு மனப்பான்மை பெற்று சிறுபான்மையை சோதிக்கின்றது
பெரும்பான்மை சிறுபான்மையை கண்டு கொள்ளாமல் சிதறடிக்க திட்டம் போடுகின்றது
சிறுபான்மை ஒன்று சேர பெரும்பான்மை சிறுபான்மையாகும்

குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர்களை சிறப்போடு கண்காணிக்க
சிறியோர்கள் பெரியவர்கள் ஆனபின் பெரியோர்களை கணிகோடு கண்காணிப்பர்
குடும்பமென்றால் பெரியோர்களும் சிறியோர்களும் அடங்கியதுதான்
நாடென்றால் பெரும்பான்மையும் சிறுபான்மையும் சேர்ந்ததுதான்
உடலில் ஒரு பகுதியில் புற்று நோய் வர உடல் முழுதும் பரவி உடலையே பாதிக்கும்
உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் உயர்வு
நாட்டில் ஒவ்வொரு மக்களும் உயர்வடைய வேண்டும்/In matters of conscience, the law of the majority has no place.
- Mahatma Gandhi/ தன்னலமற்ற அறிஞனின் இழப்பும் அவனுக்கு வெற்றிதான்
தன்னலமற்ற அறிஞன் இழப்பாக மற்றவருக்கு விட்டுச் செல்வது அவனது அறிவை

தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்



தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது 
 
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது
  

Wednesday 13 August 2014

பயணம் புறப்படு முன்

ஒருவர் பயணம் போகும் பொழுது ..
அவரை வாழ்த்தி அனுப்புகின்றோம்
அவரிடம் பயணத்தில் உள்ள சிலருக்கு 'சலாம்' வாழ்த்துகள்
சொல்லச் சொல்கின்றோம்
அல்லது சில பொருட்களை மற்றவருக்கு கொடுக்கச் சொல்கின்றோம்
அவர்கள் சரி என்று உடன்படுகின்றார்கள்
இதில் ஒரு உயர்ந்த உண்மை ஒளிந்திருக்கின்றது
அவர்  ஒப்புக் கொண்டு கொண்டுச் செல்வது அமானிதப் பொருள்
அந்த அமானித பொருளும் அல்லது அந்த அமானித வாழ்த்தும்
அவர்களது பயணத்திற்கு ஒரு பாதுகாப்பாக அமைந்து விடுகின்றது
பொறுப்புகளை முழுமையாக ஏற்று, அமானிதத்தை பொறுப்புணர்வோடு நிறைவேற்றும் மனிதர்களுக்கு இறைவன் பாதுகாப்பு தருகின்றான்
பயணம் செல்வதற்கு முன்
இறைவனிடம் பயண பாதுகாப்பு நாடி
இரண்டு ரகாயத் நபில் தொழுவதும் உயர்வானது .



 Mohamed Ali- முஹம்மது அலி
------------------------------------------------------------------------

சேருமிடம் சேரும் வரை நமது தீர்மானங்கள் யாவும் ...

வெயிட்டிங் லிஸ்டில் தான்
....இப்படி சொன்னவர் ...

மஸ்கட் டூ சென்னை விமானத்தில் என் அருகிலிருந்த நர்ஸ் மிஸ்ஸியம்மா ...ஜெர்மனியிலிருந்து ஒமான் ஏர்வேஸில் வருகிறார்.

உண்மையும் அது தானே .....நண்பர்களே.


Iskandar Barak

ஒளி தரக் கூடியவள்


முத்து விழிகளை கொண்ட கண்கள்,
தலை முடியில் தங்கச் சரங்களை கோத்து நிற்க
பொங்கி வரும் ஆரம்ப நீரூற்றுகள் போன்று
மங்காத அவள் மனம் மகிழ
கோவைப் பழத்தை ஒத்த செவ்விதழ்களில் புன்னகை பூக்க .
உதிரும் சொற்கள் முத்துச் சொற்களாக சிதற
பெண்மையின் நளினம் மேன்மைப் படுத்த
மணப்பெண் பார்க்க வந்தவர்கள் மனதில் மகிழ்வு சேர
உறுதிபட சொல்லிச் சென்றார்கள்
இப் பெண்ணே எங்கள் வீட்டற்கு ஒளி தரக் கூடியவள் யென்று

Friday 1 August 2014

இனி இருக்கப் போகும் வாழ்வில் ..

காதலை அறிந்துக் கொள்ளவில்லை
காதல் அழகில் அடங்கிப் போனதாக அறிவு மங்கிப் போனது

அழகை நாடி அலைபாயும் மனம்
உண்மையை நாடாமல் சிதைந்துப் போனது

காதல் நேசத்தில் உள்ளடங்கியதனை
சேவை இதயத்தின் ஒளியானதென்பதனை
கடந்த காலங்கள் உணர்த்திவிட்டன

இனி இருக்கப் போகும் வாழ்வில்
உன்னோடு உயர்வாக வாழ்வை தொடர்வேன்

நேசிக்கின்றேன் உன்னை உயிர் உள்ளவரை
நேசிகின்றேன் உன்னோடு இருப்போரையும்

உங்களுக்கு சேவை செய்வதிலேயே
எந்தன் மனம் உவகை கொள்ளும்