Saturday 9 December 2017

நம் கையில் ஒன்று எப்போதும் இருந்தது

நம் கையில் ஒன்று எப்போதும் இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று உதவியாக இருந்தது
நாம் செய்ய வேண்டியtதை கேட்க ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை கேட்காதவர் ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்திருந்தால் கிடைக்க வேண்டியது ஒன்று இருந்தது

Wednesday 6 December 2017

எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து

சுழலும் உலகத்தில் சொத்தும் சுழலும்
சுழலும் ஆட்சியில்  சொத்தும்  நழுவும்
சொத்து தேடியும் வரும் தேடாமலும் கிடைக்கும்
சொத்து தேடி வந்தால் மகிமை
சொத்து தேடாமல் வந்தால் நியதி
சொத்து நம் செயலால் அடுத்தவர் கையில்
சொத்து எங்கிருந்தாலும் மதிப்புதான்
சொத்தை சேர்க்க படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தை விட்டதால் படும்பாடு பெரும்பாடுதான்

Thursday 23 November 2017

அருளாளனிடத்தில் அளவற்று கேட்டேன் .........

அருளாளனிடத்தில் அளவற்று கேட்டேன் .........
அருளாளன் அளவற்று கேட்டதையும் கேட்காததையும் கொடுத்தான்
அவனிடத்தில் வலுவான அறிவை கேட்காமல் விடுத்தேன்
அவனுக்கென்ன அவன் அவனை நேசிப்பவர்களுக்கும் நேசிக்காதவர்களுக்கும் இவ்வுலகில் தருவதில் தயக்கம் காட்டுவதில்லை
கேட்டதுதான் கேட்டேன் அறிவை அதிகமாக கேட்காமல் விட்டேனே
அபிவிருத்தி செய்யப்படாத அறிவால் அவனால் கிடைத்தவைகள் சிக்கல்களால் ,சிரமங்களால் சீக்கிரமே வலுவுள்ளவர்களால் பறிக்கப்பட்டன
அவன் அறிவான் என் தேவைகள் என்று அவனை தொழுது
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

Wednesday 22 November 2017

இறைவனின் அருட்கொடை பொழிகின்றது

மேகம் வர மழை வருமாம்
மின்னல் வெட்ட இடி வருமாம்
மேகம் மோத இடியோசை வருமாம்
இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ


மழையைக் கண்டு  வருடம் தாண்டி விட்டது
தூசி மழை ஊரெல்லாம் பெய்கிறது.
குளங்கள் வற்றிக் கிடக்கின்றன .
வயல்கள் வீடாகி விட்டன
வீட்டை சுத்தம் செய்ய ஆள் இல்லை
கட்டிய வீட்டிலும் வாழாமல் வெளிநாடு வாழ்க்கை
ஊருக்குள் ஒற்றுமை குறைகிறது

பழைய இனிய மகிழ்வான பசுமை வாழ்க்கை பறந்து விட்டது
பயிர்களும் காணோம் ,வெற்றிலையைக் காணோம்
நன்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் இறைநம்பிக்கை கூடுகிறது
நீர் கிடைக்காத நிலையோ அல்லது வெயிலின் கதிர் வீச்சால் காய்ந்த மனமோ
சிலர் தவறான தண்ணீரை குடிக்கும் வேதனை


Monday 20 November 2017

அழியா நினைவுகள்

கடல் அலை வீசியதோ 
காதல் வலை வீசியதோ
நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!
அன்புள்ளம் கொண்டு அந்த
'அன்புள்ள அத்தான் பாடலை ..'
'அந்த 'ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்....'
************

முதுமை வந்தால்

முதுமை வந்தால் 
வாயை கட்டுப்படுத்து
வாயை கட்டுபடுத்துவது உண்பதற்கும் 
வாயை கட்டுபடுத்துவது பேசுவதற்கும்
எழுதுகோளை எடுத்து எழுதாதே
எழுதுவதெல்லாம் பிழையாக இருக்கும் 
எழுதுவதெல்லாம் உண்மையாக இருக்கும்

Sunday 19 November 2017

'பேனாவின் முனை வாளின் முனையைவிட கூர்மையானது'.

வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது’
"The Pen is Mightier than the Sword" 
சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.
பேனா வழக்கமாக எழுத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் தன்னுடைய எண்ணங்களை காகிதத்தில் பதிவு செய்ய உதவுகிறார்.
 வாள் யாரோ எதிராக கட்டாயமாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம்.
ஒரு வாள் உடல் ரீதியாக பொருத்தப்பட்டவரால் மட்டுமே நன்கு இயங்க முடியும். ஆனால் வார்த்தைகள்  ஒரு பலவீனமான மனிதன் கூட பேனா இருந்தால் , அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்றால், அவர் விரும்பும் விளைவை வார்த்தைகளை பயன்படுதி  ஒன்றை ஆக்கவும் அழிக்கவும் முடியும்   எழுத்தாளர்களின் எழுத்துகளின் விளைவினால்  பெரிய பிரஞ்சு புரட்சி உண்டானது  .

Saturday 18 November 2017

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை. நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான்.
தேரிழந்தூர் தாஜுதீனின் பெற்றோர் : அப்துல் சத்தார் , நூருன்னிஷா.
தேரிழந்தூர் தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார். அல்லாஹ்வின் அருளால் 1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.

Wednesday 15 November 2017

நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள்

முஆத் இப்னு ஜபல் (RA)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஹலால் மற்றும் ஹராமில் எனது நாட்டிலேயே அதிகமான கற்றறிந்த மனிதர் முஆத் இப்னு ஜபல் (RA)' என்று தெரிவித்துள்ளார்கள்
. ஏமன் நாட்டில் அப்பொழுது மிகவும் மோசமான நிலையில் மக்கள் மிகவும் தவறுகள் செய்பவர்களாக இருந்தனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆத் இப்னு ஜபல் (RA) அவர்களை கவர்னராக யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள் அனுப்பியபோது,
​​'நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள் அல்லது ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண்பீர்கள் ?' என்று கேட்க

Monday 13 November 2017

மக்களை எக்காலத்திலும் நேசிக்கவே செய்கின்றார்கள்

இஸ்லாத்தில் பிரிவே இல்லை ஆனால் முஸ்லீம்களின் இறை வணக்க செயல்முறைகளில் .கொள்கையில் சரித்திர நம்பிக்கையில் சில மாறுபாடுகள் தடுமாற்றங்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா?
அதன் காரணங்களை ஆய்வு செய்வது முக்கியமல்ல அதனை ஆய்வு செய்ய முற்பட இன்னும் பிரிவுகள் உண்டாகலாம் .
சரித்திர நிகழ்வுகளை பார்த்து கேட்டு சொன்னவர்கள் அதற்க்கு விளக்கம் கொடுத்தவர்கள் சிலவற்றிற்கு மாறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் நம்பிக்கை சிறப்பாகவும் மாற்றத்திற்கு இடமில்லாதவையாகவும் இருக்கின்றன .

Wednesday 8 November 2017

நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்

உனது கண்கள் அந்த எண்ணங்களைப் பேசுகின்றன,
உனது குரல் ஒருபோதும் அதனைச் சொல்லவில்லை
உனது வலி மற்றும் துக்கம் அனைத்தும் மறைத்து
உனது மென்மையான இதயத்தோடும் இரக்கத்தோடும்
உனது வாழ்க்கையை ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்தாய்,
உன் பாசம் முடிவடையாதது
ஒவ்வொரு கணமும் அது ஒரு புதிய ஆரம்பம்
உன் வார்த்தைகள் மற்றும்
உன் நிலையான கவனிப்புடன்
உன் மென்மையான தொடுதல்
அது என் மனதை விட்டு போகும் போது
அமைதியான இறுதி தான்
எனக்கு முடிவு

Wednesday 25 October 2017

நீ அழகு உன்னை நினைத்தாலே அழகு

நீ அழகு உன்னை நினைத்தாலே அழகு (அழகு (Beauty) என்பது ஒர் எண்ணம்)
சிரித்தாலும் அழகு, அன்பாய் முறைத்தாலும் அழகு. அடம்பிடித்து அழுதாலும் அழகு, செயலிலும் அழகு
அழகிலும் அழகு
கொல்லாமை அழகு.குறை சொல்லாமல் இருத்தல் அழகு
அழகு இனிமையானது
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
படைத்தவனுக்கு அனைத்தும் அழகு
பார்ப்பவன் பார்வையில் அழகினில் மாற்றம்
நிறமெல்லாம் அழகு

Sunday 24 September 2017

மற்றவர்க்கு போதிக்க வந்த அமானுதமே(அடமானமே) உம் கல்வி

கடுமை சொல் சொன்னாலும்
கருணை சொல் சொல்வார்
முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்
துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி
காய்வழி வந்து கனியாகி சிறப்படைய
சேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற
அறவழி அறிந்து பிறவழி நாடுவார்

உங்களை அறிய தொடருங்கள் உன் ஆய்வை!

உங்களை அறிய தொடருங்கள் உன் ஆய்வை!
விழிகளை திறந்து வானத்தை உற்று நோக்குங்கள
விடியலில் கிளம்பும் வெளிச்சம்
பகலில் சுடர்விடும் வெளிச்சம்
மாலையில் மறையும் வெளிச்சம்
தினம் தொடர்ந்து வரும் சூரிய ஓட்டம்
இரவு காலங்களில் மாறி வரும் நிலா
இரவு நேரத்தில் நட்சத்திரக் கூட்டம்
இது தொடர்ந்து வரும் நிகழ்வு
இதன் ஓட்டத்தை மாற்றத்தை உருவாக்கியது யார்!
அவைகள் சுற்றி வரும் பாதையை அவைகளை அவைகளை அறிய வைத்தது யார்!

Saturday 9 September 2017

இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே.....



80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.
நல்லபடியாக நடந்து முடிந்த பின்...
+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......
+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....
+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....

Saturday 12 August 2017

காதல்,அன்பு ,நேர்மை

காதலையும் அன்பையும், நேர்மையையும் தனது இதயத்தில் மதிக்கின்ற எவரும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, நேசிப்பவரை அன்பிலும் பாசத்திலும் மனதில் கொண்டிருப்பதாக தெளிவாகக் கூறுவதொடு செயலிலும் காட்ட வேண்டும்
யாரை நேசிக்கிறீர்களோ அந்த நபரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

Friday 30 June 2017

யார் அந்த தமிழ் நெஞ்சம்


அறியப்பட வேண்டிய நண்பர் தமிழ்நெஞ்சம் .

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  தமிழ்நெஞ்சம்.
தமிழ்நெஞ்சம்.அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் தமிழ்நெஞ்சம். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

Sunday 18 June 2017

பெண்ணிற்கு தோல்வியை தாங்க முடியாது.


கிளியோபாட்ரா எகிப்து நாட்டின் ஆட்சியாளராக இருந்தது கிளியோபாட்ராவின் அழகு மட்டும் காரணமல்ல .
கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் சரளமாக பேசக் கூடியவளாகவும் கணித, தொழில் வல்லமை பெற்றவளாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது.
கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் மிகவும் பிரபலமான ராணியாக இருந்தாள். அவள் அலெக்ஸாண்ட்ரியாவில் 69 கிமு பிறந்தார். அவரது சகோதரிகள் இறந்த பிறகு, அவர் அரியணை அடைந்தாள். மற்றும் தனது ஆட்சியின் போது, தனது ஆட்சி வேகமாக விரிவடைந்த ரோமானிய பேரரசாக எகிப்து இருக்க வேண்டுமென வெகுவாக விரும்பினாள் .

உதட்டில் வரி வந்து வாயை அடைக்கிறது . .

மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
1 பெட்ரோல் விலை ஏற்றம் . ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2 கேஸ் விலை அதிகம் ஆனாலும் தேவைக்கு அது கிடைப்பதில்லை
3 பஸ் டிக்கெட் விலை அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் அது நேரத்திற்கு வந்து சேர்வதில்லை!
வந்து சேர்ந்தாலும் இடம் கிடைபதில்லை
4 ஒரு கிரிகெட்டிற்கு கோடிக்கணக்கான பணத்தைக் செலவழிப்பார்கள் ஆனால் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் விளையாட இடமில்லை.
5 உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.ஆனால் நடைபாதை நடக்கக் கூடிய பாதைகளாக இல்லை
6 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!

நோன்பு வைப்பது உடல் நலத்துக்கு நல்லது என்பதால் மட்டும் நோன்பு வைக்கவில்லை
ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டியது கடமையானது இறைவன் சொன்னதால் அதனால் நோன்பு வைக்கின்றோம்
நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!
இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் .
நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.
ஆனால் இறைவன் தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது.
இறைவன் அவசியம் என்று நம்பினால், இறைவன் உள்ளதையும் நம்ப வேண்டும்.

நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

விடியல் வருமுன்னே விழிகளில் நீர் பாய்ச்சி
வைகறையில் நீல வானத்தை நோக்கி
விழிகள் நட்சத்திரங்கள் போல் இமைக்க
வழியைப் பார்த்து புத்துணர்ச்சி பெற்று நடை போட
அவனை நேசித்து அவனுக்காக அவனில்லத்தில் தொழுதேன்.

நேற்றைய வேலைகள் இன்று நெடு நேரம் உறங்க வைக்க
விடியல் வரு முன்பே இறைவனைத் தொழுதல் கடமையாய் இருக்க
இறைவனைத் தொழுதலை தாமதிக்கச் செய்ய
இன்றைய விடியலின் அழகையும்
இயல்பான இனிய மகிழ்வையும் இழக்க நேரிட்டது

Monday 5 June 2017

எல் .கே . ஜி , அப்புறம் (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா என்னாங்க?

உங்கள் பையன்(குழந்தை) என்ன படிக்கிறான்?
எல் .கே . ஜி படிக்கிறான் .
உங்கள் பெண் (குழந்தை) என்ன படிக்கிறாள்?
யூ.கே .ஜி படிக்கிறாள்.
கிராமத்து பாட்டி கேட்க குழந்தையின் தாய் பதில் சொல்கிறாள்.

எல் .கே . ஜி , அப்புறம்  (மற்றும் ) யூ.கே .ஜி, யின்னா  என்னாங்க?
அது இந்த காலத்திலே ஒன்னாவதுக்கு (ஒன்றாவதுக்கு) முதலில் படிப்பது.   அது உனக்கு சொன்னா  தெரியாது! (என்னமோ இவங்களுக்கு மட்டும் தெரிந்தது போல் குழந்தைகளின் தாய் சொல்கின்றாள். தாய்க்கே தெரியாது அதனை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கே தெரியாது என்பது!)

'ஏம்மா பாவம் ,சரியாக சாப்பிடவும் இல்லாமல், இவ்வளவு  பெரிய பையிலே கனமா புஸ்தகம்,நோட்டு எல்லாம் தூக்கிட்டு போறாங்க. சின்ன குழந்தை.அதிலும் பையன்  வீட்டிலே ரப்பர் போட்ட பாட்டிலே (பீடிங் பாட்டில்லே) பால் குடிக்கிறான் பள்ளிக் கூடத்திலே எப்படி சாப்பிடுவான்'?  'நான் தான் போய் கொடுக்க வேண்டும். என்பாள்  தாய்.

Thursday 1 June 2017

கருப்பு நிறமுடையவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள் .

கருப்பு நிறமுடையவர்கள் உணர்ச்சிபூர்வமான உற்சாகத்துடன் களையாக இருப்பார்கள் .
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு வெப்பத்தினால் உண்டாகும் தோல் வியாதிகள் வருவது குறைவு. சாதனை செய்வதிலும் அவர்கள் குறைவதில்லை.
கருப்பு பணம் வைத்திருப்பதுதான் தவறு.
கருப்பு நிறமுடன் இருப்பது தவறில்லை.
தான் ஒரு கருப்பு நிறமுடையவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் ஒரு காலமும் வரக் கூடாது. அவ்விதம் நினைத்திருந்தால் வெள்ளையர்கள் நிறைந்த நாட்டில் ஆப்ரகாம்லிங்கனும்,ஒபாமாவும் உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியுமா!
நாம் தான் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம்.

Tuesday 16 May 2017

அல்பயான் அரபு செய்தித்தாளில் நீடூர் நசீர் அலியின் பணி

அஸ்ஸலாமு அலைக்கும்... வரஹ்

 துபாயில் அரபி செய்தி   தாள் அல் பயான் 37 வது ஆண்டு விழா 10-5-2017 அன்று சிறப்பாக கொண்டாட பட்டது . இதில் பணி செய்த எனக்கு 33 வருடம் மிகவும் பொறுப்புடன் வேலை செய்ததால் என்னை கௌரவித்தார்கள் எல்லா புகழம் அல்லாஹ்வுக்கே
நசீர் அலி
from: Mohdali Naseer <seasons123.naseer@gmail.com>
Mohamedali Naseerali. எனது மூத்த மகன் 
- முகம்மது அலி Mohamed Ali 

Tuesday 9 May 2017

நீட்டே சாட்சி

அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் (தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை



அரை சட்டை போடு
புடவை கூடாது
வளையல்கள்
தொப்பி
குர்தா
பைஜாமா
இதெல்லாம் நீட் டுக்கு உகந்ததல்ல
அறிவு வெளிவர இதெல்லாம் தடையாகிவிடும்
மொத்தத்தில் அமெரிக்க உடை உகந்ததோ !
அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது 
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் 
(தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை


-----------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
-திருக்குறள் 
மு.வ : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது..

சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது! (அல்குர்ஆன்-17:81)

Monday 8 May 2017

ஒன்றிலிருந்து உதிர்ந்து மற்றொன்றில் உயர்வு பெற்றது



பறக்கும் பறவைக்கு
இறக்கை பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் ஓர் இறகு
தரையில் விழுந்தது
பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
விழுந்த இறகு விரும்பினாலும்
பறவையின் இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை

Wednesday 19 April 2017

பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும்

  நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும்.  

    பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும்
பாராட்டுதல் சிறிது நேரம் அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்துவிட்டதாக முடிவு செய்து வெளியில் சென்று தேவையானதை முடித்து விட்டு வரவேண்டும்.

Wednesday 25 January 2017

இறைவா! உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.

எது சுதந்திரம் ?
நல்ல நாள் கெட்ட நாள் என்பது  கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை  கேட்டும், படித்தும்  மனதில்  படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி  தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு
இன்று உனக்கு தேவைப் படாதது நாளை அது அவசியமாகிவிடலாம் .
விரயம் செய்வதைக் காட்டிலும் தர்மம்  செய்து நன்மையை அடைந்துக் கொள் .

இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .


மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்

காட்சிப் பொருளாக மாறிய மனிதன்

அனைத்து பாதுகாப்பு வேலையும் மோசமானதாக இருக்கும். ஆனால் சில பாதுகாத்து வேலைகள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாக இருந்து வருகின்றன.அதிலும் இரவு நேர வேலைகள் மிகவும் அபாயகரமான வேலைகளாக உள்ளன.
மிகவும் பிரபலமான பக்கிங்காம் அரண்மனையின் சில காவலர், கடமை வீரர்கள் வேலை உலகின் மோசமான வேலைகளாக கூறப்படுகிறது. அவர்கள் எரிச்சலூட்டும்படியாக பல மணி நேரம் நின்று காவல் காப்பதுடன் காட்சிப் பொருளாக மாறிய பொம்மையாக மாறி காட்சி அளிக்க வேண்டும். அந்த காவலர்கள், சிரிக்க முடியாது, உணர்ச்சிகளை காண்பிக்க முடியாது, மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பதிலளிக்க முடியாது என்ற  பல விதிகள். தினமும் அவர்கள் சீருடை துவைத்து சலவை செய்ய வேண்டும். சிப்பாய் போன்ற கூடுதல் கடமை .கடமைகளில் தவறு நேர்ந்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள்.
நாகரீகம் வளர்ந்த நாட்டில்  விந்தை மனிதர்களாக, காட்சிப் பொருளாக மாறிய மனிதன். மற்றவருக்கு  மகிழ்வை தந்து தன்னை வருத்திக் கொள்ளும் மனிதன்.