Monday 27 April 2015

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க'


பதினாறும் பெற்றதாய் பெருமை பேசுவார்
பதினாறில் பெண்மகள் பெறவில்லையே யென வேதனைப் படுவார்

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று
பெருமக்கள் திருமணத்தில் வாழ்த்திச் சென்றனர்

பதினாறில் நன்மக்களும் ஒன்றாகி நிற்க
நன்மக்களைப் பெற்றெடுத்தாலும்
நன்மக்களில் ஒரே ஒரு பெண்மகள் இல்லாமற் போனது
நன்மக்களை பெற்றதில் நிறைவில்லாமல் போனது

Saturday 18 April 2015

உயர உயர பறந்தாலும் இருக்குமிடம் வருவதுதானே இயற்கை

இன்று வாழ்த்துவாய்
நாளை சாடுவாய்
நாளைய மறுநாள் வரவேற்பாய்

இன்றோ
நாளையோ
நாளைய மறுநாளோ
காலமெல்லாம்
உன் ஈர்ப்பில்
என்னை இருக்கச் செய்து விட்டாய்

Friday 17 April 2015

யார் செய்த குற்றம்

அறியாதவளின் அசைவு
அறியாதனுக்கும் ஆட்டம் தந்தது
அறியாதவள் ஆடை உடலோடு ஒட்டி இருக்க
அறியாதவளின் அங்கங்கள் மேடு பள்ளமாய் விளக்கி நின்றது
அறியாதவள் அறிந்துதான் அத்தகைய ஆடையை விரும்பி உடுத்தினாளோ
அறியாதவள் கருப்பு நிற அங்கியை ஆடையை தன் மீது போர்த்தித்தான் கொண்டாள்
அவள் அறியாள் அந்த அங்கியே அவளது அங்கங்களை மேடு பள்ளமாக காட்டிக் கொடுத்து விடுமென்று
அவள் உடுத்திய புறப் போர்வை இருக்கமானதாக் இருந்தது அவளது இதயத்தின் இறுக்கம் போல்
அறியாதவளின் இறுக்கம் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை
இருப்பினும் அவளது உள்மது அறியாது அவளது மூடிய வெளித் தோற்றத்தின் வடிவங்களைக் கண்டு வசீகரிக்கப்பட்டு மற்றவர்களை தடுமாற வைப்பது

இருவரின் எண்ணங்கள் மாறுபட்டிருக்க இணைய வாய்ப்பில்லாமல் போனது
இருப்பினும் அவள் அவ்வாறு இறுக்கமான ஆடையை உடுத்தி வந்ததால் முதல் குற்றம் அவளையே சாரும்

குற்றம் செய்தவனை விட
குற்றம் செய்யத் தூண்டுபவரே முதல் குற்றம் செய்தவர் ஆவார்

உறவுகள்

உறவுகள்‬ வேண்டும்
உறவுகள்‬ உன்னதமாய் இருத்தல் வேண்டும்
உறவுகளில் சிராய்ப்பு வந்தாலும் சரி செய்தல் வேண்டும்

உறவுகள் குருதி வகையில் வந்ததாய் இருக்கலாம்
உறவுகள் சேர்த்தல் வகையாகவும் இருக்கலாம்
உறவுகள் கொடுத்தல் வாங்குதல் முறையாகவும் இருக்கலாம்

உறவுகள் தொடர தொடர்புகள் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்
உறவுகள் காலங்களை கடந்து இருக்க வேண்டும்
உறவுகள் கன நேரத்தில் முடிந்தும் போகலாம்

உறவுகள் உயிரோட்டமுள்ளதாய் இருத்தல் வேண்டும்
உறவுகள் நெஞ்சத்திலிருந்து  தொடங்க வேண்டும்
உறவுகள் புறத்தோற்றத்தில் வண்ணம் ததததாய் இல்லாமல் இருத்தல் வேண்டும்

உறவுகள் உள்ளத்தை மகிவிக்க வேண்டும்
உறவுகள் நீடிக்க இறைவனின் அருளை வேண்டல் வேண்டும்
உறவுகளின் நலனுக்காக் இறைவனிடம் வேண்டுதல் வேண்டும்

                                           Mohamed Ali


Thursday 16 April 2015

உன் நினைவில் இருக்கச் செய்

இறைவா !
நான் விழித்த போது உன்னை மறந்தேன்
நான் உறங்கியபோது உன் பார்வையில் இருந்ததை மறந்து

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை காதலிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

எதை எழுதுவது

எதை எழுதுவது
எதையாவது எழுது
எல்லாம் எழுதி விட்டேன்

எதைப் படிப்பது
எதையாவது படி
எல்லாம் படித்து விட்டேன்

அவள் அடுப்பங்கரை அவளுக்கே சொந்தம்
அவள் அடுப்பங்கரையில் அவளது வேலை தொடர
அவளது அடுப்பங்கரைப் பக்கம் வரக் கூடாதாம்

Sunday 12 April 2015

எதைப் பற்றி எழுதலாம்

எதைப் பற்றி எழுதலாம்
அரசியல்
வேண்டாம் பிரச்சனையாகும்
காதல்
அய்யய்யோ அது வேண்டாம்
மார்க்கம்
அதில் தவறு வந்தால் திட்டுவார்கள்
வரலாறு
என் வரலாறே தெரியாது .மற்ற வரலாறு வேண்டாம்
கல்வி
பிழை வந்தால் சிரிப்பார்கள்
குடும்பம்
அது பெரிய குழப்பம். அதுவும் வேண்டாம்
பின் எதை எழுதலாம்!

மோகமும் ,காமமும் ,காதலும் ,இச்சையும் ஆசையும்

மோகமும் ,காமமும் ,காதலும் அற்றவர் பார்க்கும் நிலை அறிது
மனிதன் ஒரு கலவையாகவே படைக்கப் பட்டான்
மோகமும் ,காமமும் ,காதலும் அற்ற நிலையில் உலகம் இயங்காது
மக்கள் பெருக்கம் உருவாகாது
கற்பனைக்கு வயது தடையாக இருப்பதில்லை
கற்பனைக்கு உட்பட்டதுதான் மோகமும் ,காமமும் ,காதலும்
இறைபக்தி உடையோரும் வாரிசுகளை உருவாக்கவே செய்வர்
வாரிசுகளை உருவாக்க மோகமும் ,காமமும் ,காதலும் வேண்டும்
மோகமும் ,காமமும் ,காதலும் முறைபடுத்திய நிலையில் இருத்தல் வேண்டும்
-----------------------

Wednesday 8 April 2015

நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை சிறுவயதிலிருந்து அறிவேன்


நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை சிறுவயதிலிருந்து அறிவேன்
அண்ணன் பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார்கள்
அவர்கள் வக்ப் போர்டு சேர்மனாக இருக்கும்போது அவர்களை பார்க்க வக்ப் போர்டு அலுவலகத்திற்கு சென்றேன்
அப்பொழுது நான் எங்கள் ஊர் பள்ளிவாசல் டிருஷ்டியாக இருந்தேன்
அண்ணன் அருகில் அமர வைத்து என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்கள்
அவர்கள் அப்பொழுது எங்கள் சகோதரர்களையும் ,எங்கள் தந்தையும் அவர்களது சேவைப்பற்றி மன நிறைவாக சொன்னார்கள் இன்னும் நிறைய நிகழ்வுகள் அண்ணனைப் பற்றி உள்ளது
-------------------------------------

Tuesday 7 April 2015

ஸல்லல்லாஹ் பாவா/சலவாத் பாவா

 சல்லல்லாஹு அலா முஹம்மது
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ... !
படம் :மர்ஹூம் சல்லல்லா(சலவாத் பாவா) பாவா
(தலையில் பேட்டா) 
மர்ஹூம் நாஜிர் N.P.முஹம்மது இப்ராஹீம் ஹஜ்ரத்( தலையில் வெள்ளை தொப்பியுடன் )

ஸல்லல்லாஹ் பாவா பற்றித் தெரிந்த விவரங்கள் நிறையவே உள்ளன .ஆனால் அவர்கள் பிறந்தது வளர்ந்தது அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது
நான் அறிந்த வரை சொல்கின்றேன்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது அவர்களை பெரியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் நேசிப்பார்கள் .அவர்கள் குழந்தைகளை ஸல்லல்லாஹ் ஓதச் சொல்வார்கள் அவரது கையில் ஒரு உண்டியும் பையும் இருக்கும் .ஓதும் குழதைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள் .அந்த சிறிய மிட்டாய்க்கு ஸல்லல்லாஹ் பாவா மிட்டாய் என்றே பெயர் வந்து விட்டது

இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை

துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய்
நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் - தந்தை
இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் - தாய்
நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை
திருமணம் சிறப்பாக முடிந்தது
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட இல்லாமல் மனைவியை கர்ப்பமாக்கி விட்டு மாப்பிள்ளை பயணம் சென்று விட்டார்
இரண்டு வருடம் கழித்துதான் குழந்தையை பார்த்தார்
பாட்டன் ஒரு வருடம் கழித்துதான் குழந்தையை பார்த்தார்
ஆனால் இன்னும் மாப்பிள்ளையும் மாமனாரும் இன்னும் சந்திக்க முடியவில்லை வருடங்கள் பல ஓடினாலும்
அவர் வர இவர் இங்கு இருப்பதில்லை
இவர் வர அவர் இங்கு இருப்பதில்லை
பேரன் பேத்திகள் வீட்டில் நிறைவுதான்
இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை
Mohamed Ali
https://www.facebook.com/nidurali
***************************
Comment பார்த்து சேர்த்துள்ளேன்

Mohd Rafik அத்தா என் வாழ்வில் இதே தான் நடந்தது என் மாமனாரை பாரக்கவில்லை பிறகு அவரும் வபாத்தாகி விட்டார்

Friday 3 April 2015

இறப்பின் காலம் யார் அறிவார் !

இறப்பு எப்பொழுது வரும்
இறக்கும் நேரம் அறிந்திருந்தால்
இறக்கும் நேரத்திலேயாவது நல்லவராக் மாறி விடுவார்
மனிதனை கொலை செய்பவன் இதற்கு விதி விலக்கு
இறப்பின் நுனிக்கு வருபவர்
இறைவா என்னை காப்பாற்று இனி நல்லவன் ஆவேன் என்பர் சிலர்
இறைவன் அருளால் உடல்நலம் பெற்றால் இறைவனுக்கு கொடுத்த வாக்கை மறப்பார்

வட்டிக்கு விடுபவனும் மதுவை விற்பவனும் இல்லாமல் இருக்க வேண்டும்

மது அருந்துபவரைக் காண
மதம் பிடித்து வெறுக்காமல்
மது அருந்துபவரைத் திருத்து
மது அருந்துபவர் திருந்த இறைவனை வேண்டு (துவா செய் )
மது அருந்துபவர் சைத்தானிடம் அடைக்கலம் அடைய வேண்டாதே
குடியை வெறு
குடிப்பவரை வெறுக்காதே
குடிப்பவரும் தொழ வரச் செய்
குடிக்கும் பழக்கம் அவரை விட்டு நீங்க பிரார்தனை செய்ய சொல்லிக் கொடு
குடிப்பவனை விட குடிக்கக் கொடுத்து தொழில் செய்பவன் கொடியவன்
வட்டிக்கு வாங்குவதும் குற்றம்
வட்டிக்கு விடுபவன் பெரிய குற்றம் செய்கின்றான்
வட்டிக்கு விடுபவனும்
மதுவை விற்பவனும்
இல்லாமல் இருக்க வேண்டும்
----------------------------