Showing posts with label ஓரிறைவன். Show all posts
Showing posts with label ஓரிறைவன். Show all posts

Sunday, 15 September 2013

எனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவில்லை!


புகழ் பாடும் மக்களை பார்த்து விட்டேன்
குழி தோண்டி புதைக்கும் மக்களை பார்த்து விட்டேன்

பெருமை பேசி அலைந்து அழியும் மக்களை பார்த்து விட்டேன்
குற்றம் காணும் மக்களை பார்த்து விட்டேன்

குறை கூறி கண்டிக்கும் மக்களை கண்டு கொண்டேன்
மக்கள் மக்களை அழிக்கும் கொடுமையை கண்டு கொண்டேன்

எனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவில்லை
எனக்குள் இருக்கும் சிந்தனையை என்னால் இயக்க முடியவில்லை

என் பிழைகளை அறியாமல் தடுமாறுகின்றேன்
என் பிள்ளைகள் அறியாமல் செய்த பிழைகளை தண்டிக்கின்றேன்