Showing posts with label தாலாட்டு. Show all posts
Showing posts with label தாலாட்டு. Show all posts

Monday, 25 November 2013

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,
ஒரு உணர்ச்சியில்லாமல் எதுவும் நம்மை பாதிப்பதில்லை!

ஒரு எழுதி வைத்த பட்டியலை பாருங்கள்
எழுதி வைத்த பட்டியல் காற்றில் பறந்து விட்டது.
எழுதி வைத்த பட்டியல் முழுமையாக நினைவுக்கு வராது

விளையாட்டாக ஒரு பாடலை எழுத முயற்சியுங்கள்!
விளையாட்டாக எழுதிய பாடலுக்கு ஒரு இசையை கொடுங்கள்
விளையாட்டாக இசையுடன் எழுதிய பாடலை பாடுங்கள்
விளையாட்டு வினையாகி மனதில் பதிந்து விட்டதை நினைத்து மகிழுங்கள்

Thursday, 21 March 2013

குழந்தையை தாலாட்டு பாடி உறங்க வைக்க.


இசையில் மயங்காதவர் யார் ! நல்ல இசையோடு சிறந்த கருத்துகளை அந்த இசையில் சேர்த்து பாடும்போது மனதுக்கு மகிழ்வைத் தருவது இயல்பு.
குழந்தையை தாலாட்டு பாடி உறங்க வைப்பது நமது பண்பாடு,
தாய்மார்கள் பாடும் தாலாட்டில் மயங்கி தூங்காத குழந்தை இல்லை என்றே சொல்லலாம்.
ஆராரோ ஆரரிரோ என்று தாய் பாடல் பாடி கேட்காத குழந்தை இல்லை.