Sunday 7 December 2014

எதிர்பாராத நேரத்தில் சில சம்பவங்கள்

நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது தினம் நாங்கள் மூன்று பேர்கள் மாலை நேரத்தில் நடந்தே பாண்டி பஜாருக்குச் சென்று காப்பி குடித்து விட்டு மயிலாப்பூரில் நடை போடுவோம்.எங்களைப் பார்த்து எந்த பெண்ணும் பார்ப்பதில்லை
ஒரு நாள் ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக எங்களைப் பார்த்து ஒரு பெண் சிரித்தாள்
நாங்கள் அதிசயித்து அந்த இடத்தில மற்றவர்கள் கவணிக்காதபடி நின்று பார்த்தோம் .ஒருவர் அவ்வழியே வந்தவர் எங்களைப் பார்த்து 'தம்பிகளா அந்த பெண் சிரிப்பதைப் பார்த்துத் தானே நிற்கிறீர்கள் என்றார்
'இல்லை' என்றோம்
'தம்பி அந்த பெண்ணுக்கு சிறிது மூளை (பைத்தியம்) கெட்டு விட்டதால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வெளியில் போக விடாமல் அந்த அறையில் பூட்டி வைத்துள்ளார்கள் .நீங்கள் இரண்டு நாட்கள் இப்பக்கம் வருவதனைப் பார்த்து உங்களிடம் சொன்னேன் நீங்கள் தவறாக நினைக்காதீர்கள்' என்றார்
தவறு செய்யாத எங்கள் மனம் கூனிக் குறுகிப் போயிற்று .அந்த பெண்ணுக்காகக மனம் கசிந்தது
நாங்கள் ஏன் இனி அப்பக்கம் போவோம்! நாங்கள் ஏன் இனி பெண்களை ஏறெடுத்துப் பார்ப்போம்!

No comments:

Post a Comment