Thursday 20 August 2015

நித்தம் நித்தம் நினைவில் வந்து நினைவூட்ட!

பத்தினி வேண்ட மாதம் மும்மாரி பெய்யும்
மணமாகி வரவேண்டியது வராமல் 'மாதம்' மும்மாதமாக
கணவன் காதில் போட்டு வைக்க
'கள்ளி இத்தனைநாள் மறைத்து வைத்தாயே !'
இனிய முத்தங்கள் அடை மழையாய் பெய்ய
நான் என்னை மறந்தேன்
நேரம் பார்த்து நேசம் காட்டி நெருங்கினார்
வாரிசு வேண்டி பொறுமைத் தேவை
அறிவுரை ஆற்றும் ஆற்றல் பெற்றேன்
அதிசயம் ஆனால் உண்மை அடங்காதவர் அடங்கினார்

சுமப்பதில் சுகம் சுமையே தெரியாத சுமை
புளிப்பு தேடி மறைத்து உண்பதில் மகிழ்வு
வெறுப்பில்லா வேதனையற்ற வாந்தி
வாந்தி வந்தாலும் மருந்து தேடா மனம்
பிள்ளதாச்சியென்ற பெருமகிழ்வு தரும் பெரும்பேறு

தாளங்கள் போட்டு துடிப்புகள் தந்தது
வயிற்றில் தாங்கியது வெளியே வந்துவிட்டது
மடிப்புகள் மடியோடு வந்துவிட்டது
மடிப்புகள் வந்தாலும் ஆசை போகவில்லை
மச்சான் கொடுத்த முத்தம் நெஞ்சில் நின்றதால்

மச்சான் பறந்து விட்டார் பணம் சேர்க்க
நித்தம் நித்தம் நினைவில் வந்து நினைவூட்ட
ஆசை வந்தாலும் அடக்கிக் கொள்வதும்
ஒலுச் செய்து மனதை அமைதியாக்கி
இறைவனைத் தொழுது நிறைவு கொள்வேன்

No comments:

Post a Comment