Sunday 30 August 2015

அதுவும், முடிந்து விடும்

அம்மா,
நான் உன்னை இழந்து வாழ்கின்றேன்
நான் உன்னை இழந்ததால்
நான் மிகவும் கஷ்டப்பட்டேன்

நான் இன்று உனக்குப் பிடித்த நாற்காலியில் தனியாக அமர்ந்து
என் வாழ்க்கையைப்பற்றி நினைத்து அதிசயிக்கின்றேன்
அது என்னை உங்கள் ஞாபகத்தில் அழைத்துச்செல்கின்றது

உங்கள் மகளாகிய நான் வளர்ந்து விட்டேன்
உங்கள் மகள் உலகத்தை சந்தித்து விட்டாள்
உங்கள் மகள் சோதனைகளைக் கடந்து சவால்களை சமாளித்து விட்டாள்
இவைகள் அனைத்தும் என்னால் செயல்படுத்த முடிந்தது
இறைவனிடம் எனக்காக நீ செய்த பிரார்த்தனையால்தான்

நான் எக்காலமும் உன் நினைவோடு
அதிலும் அதிகமாக உன் நினைவோடு சோதனைகள் நிரம்பிய இருண்ட காலங்களில்

நான் எனது வாழ்வின் முன்னேற்றத்திற்காக
நீ எனக்காக உதிர்த்த உனது மனதின் முனங்களை
நான் நினைவுப்படுத்தி உயர்வாக கடுமையாக செயல்படுவேன்
என்னை சூழ்ந்து நின்ற கொந்தளிப்பு மற்றும் கடுமைகள் அனைத்தும் விலகிப்போகும்
அந்த வலிமை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி
உனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வேன்

No comments:

Post a Comment