Thursday 4 March 2021

கோபம்

 

கோபம் என்றால் என்ன?

கோபம் என்பது தீமைகளை நோக்கிய மனிதனின் ரகசிய ஆயுதம், ஆனால் சில சமயங்களில் அதன் விளைவாக பல உன்னத குணங்களை அழிக்கிறது. இது மனிதனின் ஞானத்தை பறிக்கிறது, இதனால் அவர் எந்த உணர்வும் இல்லாத ஒரு மிருகத்தனமான மிருகமாக மாறுகிறார்.

கோபம் என்பது ஷைத்தானின் ஒரு சோதனை

கோபம் எல்லா தீமைகளுக்கும் மூலமாகும்.

கோபம் என்பது எப்போதும் வெடிக்கும் நெருப்பின் தீப்பொறி.

கோபம் என்பது மிகவும் மோசமான நிலை, இது இமானை  (நம்பிக்கையை )  பலவீனப்படுத்துகிறது

கோபத்தின் விளைவு ஆத்திரம் கடுமையான, அதிருப்தி, தவறான உணர்வால் உற்சாகமடைதல், இதனால் உடல் வலி,  சூடான மனநிலை உருவாகின்றது , 

இது  ஒரு வன்முறை உணர்வு.

கோபம் என்பது தீவிர அதிருப்தியால் ஏற்படும் வலுவான உணர்வு.

 உண்மையில் வீரன் என்பவர் கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நபர்தான்

ஆனால் கோபப்படுவதற்கு கோபப்படவேண்டியது அவசியமாகவும் நிலையும் உண்டு ..தன்னை யாராவது தனது மார்க்கத்தை செய்லபடாமல் தடுக்கும்போது கோபப்படுவது அவசியமும் இயல்புமாவது உண்மைநிலை 

 

யாராவது , எந்தவொரு நபருடனும் கோபம் கொள்ளும் நிலையை அடையும் போது, அவர் இறைவனிடம் வேண்டி அதனிடமிருந்து விடுபட முயலவேண்டும் . அவ்வாறு செய்யும்போது அவர் அமைதியடைந்து விடுவார்

கோபத்துடன் இருப்பவர் : "நான் சாத்தானில் தீய செயலிருந்து இருந்து அல்லாஹ்விடம் அல்லாஹ்விடம் உதவி நாடுகின்றேன் ."என்று வேண்டவேண்டும் .

கோபம் ஏற்படும் போது


அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

 

இதன் பொருள் :

 

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282

 

அல்லது

 

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

 

என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115

 

குறள் 309:

 

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

    உள்ளான் வெகுளி எனின்.

 

மு.வ உரை:

 

    ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

 ---------------------------------------------

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

 

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)

 

கோபம் கொன்றுவிடும் !

 

 உயிரினம் அனைத்துக்குமே கோபம் வருவது இயல்பு. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கும் கோபம்  வரும். மனிதனைத் தவிர மற்ற இனங்களுக்கு வரும் கோபம் தற்காலிகமானது ஆனால் மனிதனுக்கு வரும் கோபம் பல்வகையானது.அது வந்து மறையும் சமயத்தில் மனதில் நிலைத்து நிற்கும். மின்னல் வேகத்தில் வந்து அதே வேகத்திலும் மறையும், கோபம் வருவது இயல்பு. அது மனித உணர்வுக்கு உள்ளடக்கம். கோபம் வர ஒரு காரணமும் இருக்கலாம். கோபப்படுவதற்கு கோபப்பட்டுத்தானே ஆக வேண்டும். கோபத்தின் அளவுகோல் அதிகமாக அதனால் விளையும் பாதிப்பும் அதிகமாகின்றது. கோபம் அதிகமாக வருவது அதிக இரத்த அழுத்தம் உள்ளவருக்கும்,தாழ்வு மனப்பான்மை உடையவருக்கும்.அதிக கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கும்  இது அதிகம் வர வாய்ப்புள்ளது. கடுமையான கோபம் மனதை பாதிப்பதோடு உயிரையே போக்கி விடும் ஆற்றலுள்ளது,  இது குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவரின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும்.  கோபம் கொள்வதால் .ஆரோக்கியத்தையும் அழித்துவிடும். கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாக  புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்து விடும்.

ஒருவருக்கு கோபம் வந்து அதனால் மற்றவரை பழி வாங்கும் திறனிருந்து ஆனால் கோபத்தை தணித்துக்கொண்டு கோபம் உண்டாகியவரை மன்னித்தாரோ அவர்தான் உயர்ந்தவர். கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்.

 

 

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.

 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.-குறள் 305

 

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

-மு.வ உரை

 

கோபம்  வந்தால் என்ன செய்வது!

கோபம் வரும்போது இறைவனை நினைத்துக் கொண்டு அவனை மனத்தால் துதியுங்கள் மற்றும் அமைதி காணுங்கள்

முகத்தை நீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

அமைதியாக கோபம் வந்த இடத்திலேயே அமருங்கள் இன்னும் கோபம் தொடர்ந்தால்  படுத்து விடுங்கள்

நன்றாக முச்சை இழுத்து விட்டு சுவாசியுங்கள். 

 

 

 மேன்மையானவர:

 அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.(குர்ஆன் -42:37.)

 

ஏன் இந்த கோபம்!  இப்படி ஏன் என்னை உதறி விட்டு எழுகிறாய் !

 

அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்

இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்

இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .

ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

No comments:

Post a Comment