Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Monday, 8 September 2014

மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு



கொடியில் கண்ட மலரை
கூந்தலில் சூட்டியதால்
மலரின் மணம் பரவ
மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு தர
அசையாத மனதையும் அசைக்க வைத்தது

அசைந்தாடி நடந்து வரும் மாதின் நடை நளினமாக காட்சித் தந்தது
நெருங்கி வந்த மாதிடம் பேச வார்த்தைகள் வர மறுத்தது
நெருங்கி வந்த மாது காத தூரம் சென்றிருப்பாள்
குறுக்கே வந்த வண்டி அவளை சிதைத்துச் சென்றது
கசங்கிய மலராய் அவள் அழகு அழிந்துப் போனது

Friday, 13 September 2013

அழகு அலைபாயும் மனதில் இல்லை

அழகு அலைபாயும் மனதில் இல்லை
அழகு சிலையாக நிற்பதிலும் இல்லை

அழகு சிதைந்தும் போகும்
அழகு நிலையாக நிற்காது

அழகு மனதைப் பொருத்தது
அழகு இடத்திற்கு இடம் மாறுபடும்

அழகு ஒருவருக்கு கவர்ச்சியாக காட்சி அளிக்கும்
அழகு மற்றவருக்கு மகிழ்வைத் தந்து நிற்கும்

Saturday, 31 August 2013

அழகே உன்னை நேசிக்கிறேன்


அழகு மனதை சார்ந்தது .ஆழகைக் கண்டு ஆனந்தமடைவது மனித இயல்பு
ஒருவர் விரும்பும் அழகு மற்றவருக்கு அழகற்றதாக காட்சி தரலாம்
அனைவராலும் விரும்பும் அழகாக காட்சித் தருவது பெண்ணின் அழகு

ஆண் பெண்ணைப் போன்று அழகாக இருப்பதில்லையா !
கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தருகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தருவதில்லை
ஆண் கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தந்தால் பாராட்டுகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தந்தால் அதனை பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகின்றது.

கண்களின் காட்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறு படுகிறதோ !
தடை போடப் படுகிறதோ !.தடை அற்ற நிலை போனால் கேடு கெட்ட அழகற்ற நிலையாகி விடுமோ!
உலகம் அழகின் இச்சையால் சுழல்வது நியதி .
இதில் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி ஏன் !