Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, 19 February 2014

வேண்டாம் இந்த வீண் வம்பு என்பது அறிவுரையாகப் போனது.


ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்தபோது அந்த இடத்தில இருந்து இறந்தவர்கள், காவல் உதவியாளர்கள் மற்றும் பலரை மக்கள் மறந்து விட்டார்கள் அவர்களும் மனிதர்கள்தான்.ஒவ்வொரு உயிரும் உயர்வானது .இறைவன் கொடுத்த உயிரை மற்றவர்கள் மாய்க்க நினைப்பது தவறு.இறைவன் இயற்றிய சட்ட முறை உயர்வானது மற்றும் நாட்டின் சட்டமும் மதிக்கத் தக்கது .அவைகளை பேணி நடக்க மக்களுக்கு பாதுகாப்பும் உயர் வாழ்கையும் கிடைக்கும் .மனிதன் இயற்றிய சட்டத்தினை மனிதன் மாற்ற முடியும் .இறைவன் தந்த சட்டத்தை மனிதனால் மாற்ற முடியாது. இறைவனது நம்பிகையும் அவனது சட்டமும் மனிதனின் மாண்பில் உள்ளத்தில் இருக்க மக்கள் வாழ்வு உயர்வடையும்


இங்கு கிளிக் செய்து படியுங்கள்


இதனையும் கிளிக் செய்து படியுங்கள்
------------------------------------------------------------------------------

Monday, 30 December 2013

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )

சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்

தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா

Thursday, 19 September 2013

தமனியிலிருந்து குருதி ஊடுருவியது தரைக்குள்

எத்தனை சிவப்பு  நீரோடைகள்,
தமனியிலிருந்து குருதி  ஊடுருவியது தரைக்குள்
தாய்நாட்டில் தரம் பார்த்து இனம் பார்த்து தலையை துண்டிக்கின்றார்
அவர் பேச முடியும் என்றால் அது அரசியல் தலைகள் தந்த துணிவு

இறந்தவர்களின் துர்நாற்றம்,
தேடியது பரிச்சயம், மத்தியில் சடலங்களை,
உயிரற்ற உடல் உறுப்புக்களை கண்டு
மூச்சு தடுமாறியது  கண்ணீர் வழிந்தது

அரவணைப்பு ஒரு இறுதி சுவடு,
உதடுகள் இடையே ஏற்கனவே ஒரு ஓட்டல்
அடிக்கிறாய் இதயங்களை குறி பார்த்து
இன்னும் அடித்து அது நாடு  முழுவதும் பரவ முயற்சி

இனப்படுகொலை,
இதயமற்ற  மோதல்,
துக்கம் இசையாக  எதிரொலித்தது ,

Sunday, 30 June 2013

எங்கே அவள்? என்று நான் ஏன் கேட்க வேண்டும் !

எங்கே அவள் என்று  நான் ஏன் கேட்க வேண்டும் !
அவள் பள்ளிவாசலுக்கு தொழ போயிருக்க மாட்டாள்
அவள் வீட்டில்தானே தொழுவாள்
அவள் விரும்பினாலும் அவளை பள்ளிவாசலில் தொழ யார் விடுவார் !

பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடுதான் அவர்களுக்குச் சிறந்தது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

ஆண்கள் தொழத் தானேபள்ளிவாசலை  பெரிதாக கட்டினோம்
ஆண்கள் தொழுவார்கள் பெரிய  பள்ளிவாசலில் ஆனால் தொழுபவர்கள்  குறைவு
பள்ளிவாசலில் மற்ற இடங்களில் பெண்கள் திரை போட்டு தொழவும் அனுமதி தரமாட்டார்கள்
பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை நிறைந்து நின்று தொழ பெரிதாக கட்டினார்கள்

அவள் பள்ளிவாசலுக்கும் போக மாட்டாள்
அவள் கடைதெருவுக்கும் போக மாட்டாள்

அவள் போகுமிடம் அவள் அம்மா வீடு அல்லது மகள் வீடு
அவள் அவளது சகோதரி வீட்டுக்கும் போயிருக்கலாம்
அவள் அவளது சகோதரியை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கவும் போயிருக்கலாம்

ஊருக்கு போய் வந்து வீடு பூட்டி இருக்க இத்தனை குழப்பங்களும் வருகிறது.
பாவம் ! போய் விட்டு வரட்டும் நாம்தான் அவளை வீட்டு வேலையில் முடக்கி விட்டோமே !

Saturday, 25 May 2013

ஊக்கமுடையோர் இடையூறுகளுக்கு அஞ்சிட மாட்டார்கள்.

  நல்ல கருத்தை ,கவிதையை விரும்பி படிக்க நமக்குள் ஒரு பொறி தட்டுகிறது. அது நம்மை உருவாக்குகின்றது .நம்மையும் அதைவிட சிறப்பாக எழுதத் தூண்டுகின்றது. நமக்குள் ஒளிந்துக் கிடப்பதனை நாம் அறியோம் .நம்மை நாமே நாம் அறிந்து விட்டால் நாம் ஞானி

  மற்றவர் நல்ல கருத்துகளை சுயமாக சிந்தித்து சிறப்பாக நயம்பட தருகின்றார்களே நாம் மட்டும் அடுத்தவர் கருத்தை போடுகின்றோமே என்ற வருத்தம் வேண்டாம்.  சொல்லியவர் ,எழுதியவர் ,உரிமையாளர் பெயரையும் சேர்த்து விடுங்கள் .அது இருவருக்கும் அறிவைப் பகிர்ந்த நன்மையை கொடுத்து விடும். காப்புரிமை இப்பொழுது வந்ததுதான்.சங்க இலக்கியங்களுக்கு காப்புரிமை இருந்திருந்தால் தமிழ் மறைந்திருக்கும்.