Showing posts with label மருத்துவர். Show all posts
Showing posts with label மருத்துவர். Show all posts

Friday, 13 September 2013

'ஓ' வென கதறி அழுதேன்

"And He gave you of all that you asked for, and if you count the blessings of Allah, never will you be able to count them…" Al Quran (14:34

இதயக் கோளாறு வந்தது
இதய அறுவை அவசியமென்றார் மருத்துவர்
இதய சிகிச்சை சிறப்பாக முடிவுற்றது
இதய அறுவையை முடித்து மருத்துவர் செலவுக்கான தொகையைச் சொன்னார்

இதயமே வெடித்துவிடும் போல் 'ஓ' வென கதறி அழுதேன்
இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆறுதல் சொல்லி சிகிச்சைதொகையை குறைக்கச் சொன்னார்

நான் மருத்துவரிடம் சொன்னேன் ' உங்கள் சேவைக்கு நன்றி தெரிவித்தேன் மற்றும் உங்கள் சிகிச்சைக்கு கொடுக்கும் தொகைக்கு நான் அழவில்லை . எழுபது ஆண்டு காலம் எனது இதயத்தை சீராக ஓட வைத்த எனை படைத்த இறைவனுக்கு இத்தனை ஆண்டுகளாக நன்றிக்காக அவனை தொழுது வராமல் இருந்தோமே! என நினைத்து என் மனம் குமுறுகிறது மனதை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன்' என்றேன்

Saturday, 31 August 2013

மருத்துவரின் சேவை மரியாதைக்குரியது


பண்டைய காலங்களில் இருந்து மருத்துவர்களுக்கு மரியாதை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால் நம் உடல் நலத்திற்கு தேவையான ஆலோசனை தருகிறார்கள்.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்துகளை வாங்கி சாப்பிடக்
கூடாது , தேவையற்ற நிலையில் அடிக்கடி ஆண்டிபயோடிக் (கிருமிக் கொல்லி நாசினி )மருந்துகளை எடுத்துக் கொள்வதால் இயற்கையாக உருவாகும் உடலின் எதிர்ப்பு சக்தியை  குறைந்துவிடும் .வளர்ந்த நாடுகளில் ஆண்டிபயோடிக் மருந்துகளை மிகவும் அவசியம் கருதினால்தான் கொடுப்பார்கள்
நாம் மருதுவரிடம் 'ஊசி ' போடும்படி நாமே கேட்கிறோம் .நல்ல மருத்துவர் வியாதிக்கு தேவையானதைத்தான் செய்வார்.
மருந்து சாப்பிட முடியாதவருக்கும் ,மயக்க நிலையில் உள்ளவருக்கும் அவசர தேவைக்கும் சதை வழி அல்லது நரம்பு வழி மருந்து செலுத்துதல் அவசியமாகின்றது .
மருத்துவரிடம்  நம் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் மறைத்துப் பேசக் கூடாது ..
மருத்துவரை தேவையில்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
நாம் நமெக்கென ஒரு சிறந்த மருத்துவரை குடும்ப மருத்துவராக அமைத்துக் கொள்ள வேண்டும் .அவ்வாறு இருந்தால் நமது உடலைப் பற்றிய நிலைமை அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும் . இதனால் தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
நம்பிக்கை மருத்துவம் செய்துக் கொள்வதற்கு அடித்தளமாக உள்ளது .
தொழிலிலேயே ஒரு உயர்வான் தொழிலாக மருத்துவத் தொழில் உள்ளது. இது சேவையின் அடிப்படையில் அமையப்பட்டது.

Monday, 20 May 2013

நல்ல காரியத்திற்காக பொய் சொல்வது தவறில்லை

நடந்தது உண்மை .
எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல . நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான
மருத்துவர்  Dr.Ramathilagam M.D.,. D.M.,Gastroenterologist 
வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர்  உள்ளார் அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின் ஆலோசனைக் குறிப்புகளும்  மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ டெஸ்டுகளும் மற்றும்  எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று  அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள் மட்டும்  எழுதி கொடுத்திருந்தார். அவருக்கு வந்துள்ள வியாதியை  .உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர்.நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.

 மருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ விபரங்களைக் காட்டினோம்.  மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.