Showing posts with label முத்தெடுத்து சேர்ப்பது. Show all posts
Showing posts with label முத்தெடுத்து சேர்ப்பது. Show all posts

Friday, 20 September 2013

மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்

மனதில் விரிசல்
உள்ளத்தில் நடுக்கம்
நினைப்பில் தடுமாற்றம்
புரிதலற்ற போக்கு
அறிதளற்ற நிலை
சிக்கலில் சிக்கும் குழப்பம்
வடிகால் அற்ற தேக்கம்
தவறான பாதையில் தவறிப் போதல்
அனாதையாய் விடுபட்ட நிலை  
வார்த்தைகள் மற்றும் நம்பிக்கை துரோகம்,
நொறுங்கிய  மனமாய்   மாய்த்துக் கொள்ளும் நிலை
பாராமுகமாய் படைத்தவனை அறியாமல் இருந்த நிலை

கடலில் சிப்பிக்குள் இருக்கும்  முத்து மறைந்திருக்க
உலகில் உயர்ந்திருக்கும் இருக்கும் இறையோனும் மறைந்திருக்க
கடலில் மூழ்கி முத்தெடுத்து சேர்ப்பதுபோல்
இறைமறை கற்று அதில் மூழ்கி உயர்வை பெற வழி கண்டேன்
இறையை நாடும் மனம் இயல்பானது

வாழும் வாழ்க்கை உயர்வானது
செய்யும் செயல் சிறப்பானது