Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts

Saturday, 29 November 2014

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது

Friday, 13 September 2013

ஆழ் கடலில் அலை காணவில்லை

ஆழ் கடலில் அலை காணவில்லை
முழு குட நீர் ததும்புவதில்லை

ஒலியற்ற நிலையில் அமைதி
பேதமற்ற மனதில் நிம்மதி

அமைதியோடு வரும் நிலையில் குழப்பமில்லை
அமைதி சமாதனத்திற்கு வழி வகுக்கிறது

ஆரவாரம் நிம்மதியற்ற நிலையை உருவாக்குகிறது
ஆரவாரமற்ற அமைதி நிலை தியானத்தையும் ,சிந்தனையும் ஊக்குவிக்கின்றது