ஆட்சி செய்யும் மன்னன் தன் நாட்டை பார்க்க உலா வந்தான்.
மாமன்னனைப் பார்க்க மக்கள் குழுமி நின்று வேடிக்கையும் ,வரவேற்பும் செய்தனர்
மன்னன் ஒரு ஏழை குடிமகன் தன்னை பாராமுகமாக தனது வேலையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான்
மன்னன் அந்த ஏழை குடிமகனை அழைத்து 'அனைவரும் என்னை பார்க்க, வரவேற்க வந்துள்ளார்கள் நீ மட்டும் பாராமுகமாய் இருப்பதின் காரணமென்ன என்று வினவினார்'
ஏழை சொன்னான்
'சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் போல் ஒரு அரசர் இவ்வழியே வந்தார். அவர் இங்கேயே நோய் வர இறந்து போனதால் அவரது உடலை இங்ககேயே அடக்கம் செய்தனர். அதன் பிறகு ஒரு ஏழை இறந்து போனதால் அரசன் அருகிலேயே அந்த ஏழையின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது .
