Showing posts with label முடிவு. Show all posts
Showing posts with label முடிவு. Show all posts

Sunday, 22 September 2013

முடிவு நம் அனைவருக்கும் ஒன்றுதான்

ஆட்சி செய்யும் மன்னன் தன் நாட்டை பார்க்க உலா வந்தான்.
மாமன்னனைப் பார்க்க மக்கள் குழுமி நின்று வேடிக்கையும் ,வரவேற்பும் செய்தனர்

மன்னன் ஒரு ஏழை குடிமகன் தன்னை பாராமுகமாக தனது வேலையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான்
மன்னன் அந்த ஏழை குடிமகனை அழைத்து 'அனைவரும் என்னை பார்க்க, வரவேற்க வந்துள்ளார்கள் நீ மட்டும் பாராமுகமாய் இருப்பதின் காரணமென்ன என்று வினவினார்'

ஏழை சொன்னான்
'சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் போல் ஒரு அரசர் இவ்வழியே வந்தார். அவர் இங்கேயே நோய் வர இறந்து போனதால் அவரது உடலை இங்ககேயே அடக்கம் செய்தனர். அதன் பிறகு ஒரு ஏழை இறந்து போனதால் அரசன் அருகிலேயே அந்த ஏழையின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது .

Tuesday, 20 August 2013

இதுதான் உன் முடிவா ?

இதுதான் உன் முடிவா ?
அதுதான் உன் முடிவென உன்னால் முடிவெடுக்க முடிமா !

முடிவுகளை மாற்றிக் கொள்ள முயற்சிக்க மாட்டாயா ?
முயற்சி செய்வது உன் கையில் இருக்க முடிவெடுக்க ஒருவன் உள்ளான் என்பதை மறந்தது ஏன்!

நல்லதை நோக்கி நடை போடு
அல்லவை காண அகன்று விடு

நல்லவையும் அல்லவையும் நிழல் போல் தொடரும்
தொடர்வது அனைத்தும் உன்னை தொட்டு விடாது

நல்லவை நடக்க நாயனின் உதவி நாடு
நல்லவையும் அல்லவையும் நாயன் தந்துவிடின் அதுவும் நல்லவையாகவே இருக்குமென வாழ்வைத் தொடரு

நடந்தவை முடிந்தவை
நிகழ்பவை நடப்பவை
நடக்க இருப்பவை நாயன் நினைப்பவை

நாயன் அவனே அல்லாஹ்(இறைவன்), வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, ...