Showing posts with label உணர்சி. Show all posts
Showing posts with label உணர்சி. Show all posts

Friday, 13 September 2013

கண்களில் கசியும் நீர் உயர்வானது


அழுகை இயற்கையாய் கொட்டும் மழை
மனதை இயல்பாய் வைத்திருக்க இமைகளில் வழியும் நீர்
கண்களில் ஊரும் நீர் ஒரு கேலன் நீருள் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றது
கண்களை பாதுகாப்பது விழிகளில் ஊரும் நீர்
மனதின் பாரத்தை,சோகத்தை நீக்க அழுகை உதவுகிறது
அழுகை இயற்கையாக வர மனம் அமைதி பெறுகிறது
அழுகை ஒப்பாரியாகவும் ,ஓலமாகவும் வர அழுகை தன் இயல்பை இழக்கின்றது
மனிதனைத் தவிர மற்ற இனங்கள் தன் உணர்சிகளை கட்டுப்படுத்துவதில்லை
மனிதன் மட்டும் அனைத்தையும் கட்டுபடுத்த அவனுக்கு பல வியாதிகள் வருகின்றது
மனிதன் அனைத்து உபாதைகளையும் கட்டுபடுதுகின்றான்
அழுகையை அடக்குகின்றான்
சிரிப்பை முடக்குகின்றான்
மகிழ்வை காட்டுவதிலும் நேரம் பார்க்கின்றான்
சிறுநீர் வருவதையும் நிறுத்தி வைக்கின்றான்
இறுதியில் வரக் கூடாத வியாதி வந்து வேதனைப் படுகிறான்
உணர்ச்சி இறைவன் தந்த அருள்
மகிழ்வான உணர்ச்சியின் காரணமாக வருவது ஆனந்தக் கண்ணீர்
அடக்க முடியாத சிரிப்பால் வரும் ஆனந்தக் கண்ணீர் ஆரோக்கியமானது
துயரத்தால் வரும் அழுகை மனதை எளிமையாக்குகிறது