Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Tuesday, 8 July 2014

மனது புதுமைகளை தந்துக் கொண்டே இருக்கும்

கடலில் உயிர் வாழ்பவை பல் வகை
கடலில் உயிர் போக்கியவை பல் வகை

மனதில் உதித்தவை பல் வகை
மனதோடு அழிந்தவை பல் வகை

கடலில் இருப்பதும் வாழ விரும்புகின்றது
மனத்தில் இருப்பதும் சொல்ல விரும்புகின்றது

கடலில் அழிந்தவை பயனற்றுப் போனது
மனதில் உதித்தவை பயன்படுத்தாமல் பயனற்றுப் போனது

கடல் அலையும் தொடரும்
கடல் நீரும் வற்றாது

Sunday, 15 September 2013

தேடுதலை நம் கையில் விட்ட இறைவன் நம் திறமையை வளர்க்கவே!

கற்பனைகளும் கவிதைகளும் கனவில் வருகின்றன
கற்பனைகளும் கவிதைகளும் பகலில் மறைகின்றன

நினைவில் நின்றவைகளை கவிதையாக்கவும் முடியவில்லை
செயலில் செய்ய நினைப்பவைகள் கனவாய் மறைகின்றன

செயல் படுத்தவும் ஒரு திறன் வேண்டும்
முயற்சி இன்றி பலனை நாடும் வேட்கை விரயம்

இறைவன் அனைத்து பறவைகளுக்கும் உணவு அளிக்கின்றான்
இறைவன் அனைத்து பறவைகளின் கூட்டில் உணவை போடுவதில்லை

உலகில் அனைத்தையும் பரவச் செய்தவன் இறைவன்
உலகில் உள்ளவைகளை தேடுதல் பொறுப்புகளை நம்மிடம் தந்தான் இறைவன்

அன்னை மரியம் (அலை) ஆண் துணையின்றி கருவுற்றதும் மகவைப் (ஈசா நபி) பெறச் செய்தவனும் இறைவன்

Thursday, 12 September 2013

ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.