Showing posts with label தேவை. Show all posts
Showing posts with label தேவை. Show all posts

Monday, 8 September 2014

நானும் நீயும்

 
நீ என்னோடு இருக்க வேண்டும்
நீ என்னோடு எப்பொழுதும் இருக்க வேண்டும்

நீ இல்லாமல்
நான் இருக்க முடியாது

உன் சேவை எல்லைகளுக்கு அப்பார் பட்டது
உன் சேவை தொய்வு இல்லாதது

நான் தனியாக நிற்க முடியாது
உன் மென்மையான கரங்களால் அரவணைத்துக் கொள்

உன் தேவை வேண்டி
நீ என்னிடமில்லை

என் தேவை வேண்டியே
நீ என்னுடன் உள்ளாய்

உன்னை போக விட்டு
நான் இருக்க முடியாது

நான் போக நேர்ந்தாலும்
நீ இருந்து உன் சேவை தொடர வேண்டும்

நான் ஆற்றிய பணிகள் அனைத்தும்
நீ கொடுத்த அர்பணிப்புகள் 

Saturday, 1 February 2014

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்! என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன் .

எல்லாம் என்னிடம் இல்லை
இல்லாததை பெற ஆசையை கொடுத்தாய்

அனைத்தும் அறியாததால்
அறிவை கற்கும் தேடலை தந்தாய்

சிரமத்தை தந்தாய்
சிரமத்தை நீக்கும் வழியை காட்டினாய்

அளவோடு கொடுத்தாய்
தேவையானதை தேடச் சொன்னாய்

வட்டத்தின் வரம்புகளில் நிற்க வைத்தாய்
முன்னேற்றத்தின் வாய்ப்புகளை உருவாக்க வைத்தாய்

களைத்து ஓயச் செய்தாய்
களைப்பை நீக்கும் வலிமையை தந்தாய்

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்
என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன்

என்னிடம் எல்லாம் இருந்திருந்தால்
உன்னருள் நாடி நின்றிருக்க நினைத்திருக்க மறந்திருப்பேன்

தேவையானது அனைத்தும் இருந்திருந்தால்
முறையான நன்றியை முழுமையாக செய்திருக்காமல் இருந்திருப்பேன்

குறைவானதை தந்து
முறையாக தேட வைத்து
நிறைவாகப் பெற்று
குறைவற்ற நன்றியை
மனமுவப்ப தரச் செய்தாய்
--------------------------------------------

Saturday, 27 April 2013

எத்தனை வகை குழைவுகள்!

 பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . தேவைக்கு மேல் சேர்த்து வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவிதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. காரியம் நடக்க  எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் காண்கின்றோம்


 நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது .அமெரிக்கர்கள் வெள்ளை நிறம் ஆனால் குறுகிய மனது. அடுத்தவர் நாட்டையே அடிமையாக்க நினைக்கும் பேராசை