Friday 3 January 2014

புன்னகை


நான் அறிவேன் உன் நிலையை
உன் துயரமும் உன்னை வாட்டுகிறது
உன் நம்பிக்கையும் உன்னை விட்டு நகர்கின்றது
அத்துடன் உன்னால் மகிழ்வாய்
மற்றவரைக் கண்டால் புன்னகை பூக்க முடிகின்றது
அதுவே உனது பலமாக உள்ளது
அதனைக் கண்டு நான் அதிசயிக்கின்றேன்
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லையே
அந்த இயல்பான புன்னகை என்னிடம் இல்லாததினால்
நான் வாழும் வாழ்வு ஒளி தராத வாழ்வானதோ !

உன் செயலில் குறுக்கீடுகள் இல்லை
உன் சிந்தனையில் குழப்பமில்லை
உன் புன்னகையால் உனக்கு விரோதியுமில்லை
உன் புன்னகை மற்றவர்களை மகிழ்விக்க வைக்கின்றது
உன் புன்னகையே உனக்கு வலுவைத் தருகின்றது

உன்னுள் ஒன்றியிருக்கும் உன் உந்துதல் சக்தி
உன்னை உயவாக்கி வைக்கும் என்ற நம்பிக்கை
உன்னுடன் ஒன்றியுள்ளது
உன் புன்னகை உன்னை உயர்த்தி நிறுத்தும்

நீ தனித்த மரமல்ல
நீ ஒரு நிழல் கொடுக்கும் தோப்பு
நீ ஒரு தோப்பை உருவாக்கி விட்டாய்
நீ தரும் இனிய புன்னைகையால்

நானும் அந்த தோப்பில்
ஒருவனாய் இருந்து
இளைப்பாற விரும்புகின்றேன்

No comments:

Post a Comment