Friday 28 March 2014

வேண்டுதல்

வேண்டுபவருக்கும் தருபவன்
வேண்டாதபவருக்கும் தருபவன்

வேண்டியது கிடைத்தாலும் நன்மையின் பொருட்டே
வேண்டியது கிடைக்கவில்லை யெனினும் நன்மையின் பொருட்டே

வேண்டியது உடனேயும் கிடைக்கலாம்
வேண்டியது காலம் தாழ்ந்தும் கிடைக்கலாம்

வேண்டியதை கேட்பதும் தேவை அற்றவனிடம் இருத்தல் வேண்டும்
வேண்டாதவைகளை தவிர்க்க வேண்டி கேட்பதும் தேவை அற்றவனாக இருத்தல் வேண்டும்

வேண்டுபவன் 'வேண்டுதல் வேண்டாமை இலானான' இறைவனாகத்தான் இருக்க முடியும்

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல'

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை தொழுபவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

இறைநம்பிக்கை அற்றவன் என்று பெருமை பேசுவார்
'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல' என்ற குறளை மேன்மையாக
பெருமை படுத்தி இயம்புவார்
#வேண்டுதல்

No comments:

Post a Comment