Saturday 29 March 2014

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்!

இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்

இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்

இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்

இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்

இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்

இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்

இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்

இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்


இறைவனை நேசித்தல் இதயத்திலிருந்து வருதல் வேண்டும்

இறைவன் பார்ப்பதெல்லாம் நம் இதயத்தின் எண்ணங்களை

இறைவன் கேட்டதை கொடுப்பான் யென்ற நம்பிக்கையோடு கேளுங்கள்

இறைவனிடம் கேட்டது கிடைக்காமல் போனால் நிராசை யடைய வேண்டாம்

இறைவன் கொடுப்பதும் நன்மையாக இருந்து விடும்

இறைவன் கொடுக்காமல் விட்டதும் நன்மையாக அமைந்து விடும்

இறைவனிடம் இறைஞ்சி கேட்பதை இறைவன் நேசிக்கின்றான்

இறைவனை இறைஞ்ச தூது தேட வேண்டாம்

இறைவனின் படைப்பில் உயர்ந்த படைப்பாய் மனிதன் இருக்கின்றான்

இறைவன் படைத்த மற்றவைகள் மனிதனுக்காகவே படைத்தவைகளாக இருக்கின்றன

இறைவன் நம்மையும் நமக்காக மற்றவையும் படைத்து உலகை உருளச் செய்கின்றான்

இறைவனை இறைஞ்சி நன்றி செலுத்தி இறைவனை தொழுது வாழ்வது நம் வாழ்வின் கடமையாகும்

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) வழி இஸ்லாத்தின் வழியாகும்

இறைவன் தந்த இஸ்லாத்தின் வழி வாழ்ந்து மறைய சுவனத்தின் வழி நம்முடையதாகும்
-------------------------------------------------------
இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி நிற்கும் இறையடியான் முகம்மது அலி ஜின்னா
நீடூர்.S.E.A. முகம்மது சயீத் அவர்கள் எழுதிய பாடலை தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் பாடுகிறார் .

No comments:

Post a Comment