Monday 24 March 2014

விவாதங்கள் விளங்க வைக்கின்றன

விவாதங்கள் விளங்க வைக்கின்றன
அறிக்கைகள் அறிய வைக்கின்றன

விவாதங்களுக்கு அறிக்கைகள் தேவைப்படலாம்
விவாதங்கள் ஆக்கப் பூர்வமாக இருப்பதுடன் உள்ளத்தை கவரக் கூடியதாக அமைய வேண்டும்

விவாதங்கள் ஒரு கருத்தைப் பற்றியதாக இருக்கும்
விவாதங்கள் ஒரு தனி மனிதனை சாடுவதாக அமையக் கூடாது

விவாதம் செய்பவர் தவறான கருத்தை சொல்கிறார் என்று நேரிடையா சொல்லாமல்
நமது வாதத் திறமையும் அதற்கான ஆதாரங்களும் மற்றும் எடுத்துக் கொடுக்கும் அறிக்கைகளும் மற்றவரை புரிய வைக்க வேண்டும்

வாதத்திற்காக உண்மையல்லாதவற்றை உண்மையானதாக சொல்லக் கூடாது
உண்மையை சொல்வதில் தயக்கமும் காட்டக் கூடாது

அறிக்கைகள் ஒரு செய்தியாக இருப்பதால்
அறிக்கைகள் ஒரு தனி மனிதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்

ஒழுக்கம் அனைத்திலும் தேவை
ஒழுக்கம் அரசியலிலும் அவசியம்

ஒருவரது கருத்து அடுத்தவரது கருத்துக்கு ஒத்துப் போக வேண்டிய அவசியமில்லை
ஒருவரை வாதத்தினால் மாற்றி விட முடியாது

ஊரில் உள்ள சிலர் ஒரு கொள்கையை விரும்பினால்
ஊரில் உள்ள அனைவரும் அந்த கொள்கைக்கு உடன் பட்டவர்கள் என்ற முடிவுக்கு வருதல் முறையல்ல

பொது ஸ்தாபனங்களும் ,கல்வி நிறுவனங்களும் , தொழுமிடங்களும் பொதுவாகவே இருக்க வேண்டும் .
ஒரு சார்புடையதாக இருத்தல் கூடாது மற்றும் வீணான பேச்சுக்கும் ,தேவையற்ற விவாதங்களுக்கும் அங்கு இடமில்லை

மார்க்கமும் ,மதமும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது
மார்க்கமும் ,மதமும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது

வழிபடுதல் உளவியலைப் பொறுத்தது
வழிபடுதலின் நோக்கம் படைத்தவனுக்கு நன்றி செலுத்துதல்
வழிபடுதல் படைக்கப் பட்டவனுக்கு உரித்தானதல்ல
இறைவனுக்கு வழிபடுதல் முழுமையானது அது விவாதத்திற்கு உரியதல்ல

#விவாதம்

No comments:

Post a Comment