Monday 7 July 2014

அறிய நம்பிக்கை வேண்டும் உண்மையை இறைவனே அறிவான்

உங்களைப் பற்றி உண்மையானது
உங்களைப் பற்றி உண்மையானதை எழுதுங்கள்
உங்களைப் பற்றி உண்மையானதை எழுத உயர்வீர்கள்

உங்களைப் பற்றி உண்மையானதை அடுத்தவர் எழுதுவது முடியாது
உங்களைப் பற்றி அடுத்தவர் எழுதுவது
உயர்வானது மட்டும் இருக்கும் அல்லது பொய்யானது கலந்து இருக்கும்
உங்களை உயவாக்க அது உதவாது
-------------------------------
இறைவனை நம்பு
இறைவனை நம்பினால்தான்
நம்பிக்கை மீது
நம்பிக்கை உள்ளவனாகிறாய்
இறைவன் அறிவான்
இறைவன் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையை

மனிதனிடமும் நம்பிக்கையுடையவனாக நடந்துக் கொள்
மனிதர்களில் சிலர் நம் செயலின் மீது நம்பிக்கை பெறவில்லையெனில்
மனிதர்களில் சிலர் பெறாத நம்பிக்கையைப் பற்றி வருத்தப் பட்டு சோர்ந்து விடாதே
மனிதனாய் நம்மை படைத்த இறைவன் மீது நாம் நம்பிக்கை பெற முயல்வதே நம் வாழ்வின் உயர்வு

No comments:

Post a Comment