அம்மா !
நீ இறக்கவில்லை
நீ இருக்கிறாய்
நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய்
நீ இன்றேல் நான் ஏது !
என்னைப் பெற்று மகிழவே
உன்னை உன் அம்மா பெற்றால்
என்னைப் பெறவே
உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான்
உன்னை தோற்று வைத்தவன்
உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்
என்னை சில காலங்கள்
இவ்வுலகில் உலவ விட்டு
என்னையும் உன்னைப்போல்
தன வசமாக்கிக் கொண்டு
உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்
உன்னை இறைவன் முதலில் தன் வமாக்கிக் கொண்டது
என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்
முற்றிலும் அறிந்த அவன்
முறையாகவே செயல்படுவான்
உனக்காக இறைவனை நான் வேண்ட
இறைவன் நமக்கு கொடுத்த் அருள்தான்
அவன் அருட்பெரும் கருணையுடையோன்
Mohamed Ali


Very beautiful post.......
ReplyDelete