Tuesday 10 December 2019

நம்பிக்கை


நம்பிக்கை
எதிர்மறை தாக்கங்களை எப்போதும் அடையாளம் காண்பது எளிதல்ல.
அவை பெரும்பாலும் நேர்மறையான தாக்கங்களைப் போலவே தோன்றுகின்றன.
ஒரு வழிபாட்டு முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அது அற்புதம் என்று கருதுகிறோம்
எச்சரிக்கை அறிகுறிகளைத் தவறவிடுகின்றோம் ,
ஒரு நேர்மறையான சக்தியாகத் தோன்றும் ஒன்றை ஆழமாகக் காண்கின்றோம் .
இதனால்தான் சரியான தாக்கங்களை அடையாளம் காண பகுத்தறிவு சிந்தனை ஒரு முக்கிய அங்கமாகும்.

நம்பிக்கை என்பது ஒரு சக்திவாய்ந்த உண்மை .
நம்பிக்கை என்பது உண்மை அல்லது பொய்யான ஒன்றை நம்புவது அல்ல .
நம்பிக்கைகளை நாம்  தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
பொய்யான செய்திகளை வலுவான நம்பிக்கையுள்ளதாக நாம் நிச்சயமாக நம்ப விரும்பவில்லை.
செய்திகள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம் என்பதற்குப் பதிலாக, அவை எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்க முடிந்தவரை அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் .


சுய மீட்புக்காக முன்முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
மாற்றம் ஒரு வினைதான். மாற்றத்தை நீங்கள் பார்க்க வேண்டும்

இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
குர்ஆன் 53:39

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்
.குர்ஆன் 53:41.

நம்பிக்கையுடன் நன்னெறியான செயல்களைச் உறுதியுடனும், நேர்வழியோடு பொறுமையுடனும் செயல்படுங்கள்

எப்போதும் இறைவனிடம் உதவி கேளுங்கள்

தன்னம்பிக்கையற்றவன் இறை நம்பிக்கையற்றவன்
தன்னம்பிக்கையும் ஆர்வமும்  ஒவ்வொருவருக்கும் அவசியம்.
ஆர்வம் உந்துசக்தியை தரும்
உந்துசக்தி முன்னேற்றத்தைத் தரும்
ஆர்வமற்றோர் செயலற்று இருப்பர்

 நம்பிக்கை, ஆர்வம்,, பேராவல் முன்னேற்றத்தின் அடித்தளம்
 செயலின் ஈடுபாடு முழுமையாக இருத்தல் வேண்டும்
 செயலின் ஈடுபாடு வெற்றியின் திறவுகோல்
ஆசைப்படுதல் இயல்பு  ஆனால் பேராசைப்படாமல் இருத்தல் வேண்டும்
முயற்சியின் விளைவில் ஏதிர்பார்த்ததும் ஏதிர்பாராததும் கிடைக்கலாம்
அதுவும் நன்மைக்கே இருக்கலாம்


தன்னம்பிக்கை பற்றி திருக்குர் ஆன்

''உங்களில் தன்னம்பிக்கை மிக்க இருபது நபர்கள் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்ளலாம். நூறு நபர்கள் இருந்தால், ஆயிரம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.''      [அல்குர் ஆன் -8.65]


 நம்பிக்கை இல்லாமல்  வாழ்க்கையில் சாதனை இல்லை
தன்னம்பிக்கைக்கு மன வலிமையைத் தரும்
மன வலிமை கொண்டவர்களால் தான் சோதனைகளைக் கடந்து சாதனைகள செய்ய முடியும்
இயலாமை என்பது செயலாற்ற தன்மை
 மன வலிமை கொண்ட முஃமின் அல்லாஹ்வின் அன்பை பெற்றவன் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

Mohamed Ali Jinnah

No comments:

Post a Comment