Tuesday 10 June 2014

இறைவனை நினைத்து அவன் நினைவோடு ஒன்றி தொழுவது மகிழ்வு

மகிழ்வு
வாசனைப் பொருளை நாம் வைத்திருக்க
வாசனை திரவத்தை நம் ஆடையில் தடவிக் கொள்ள
அவைகளை மற்றவர்களுக்கும் பகிர்தளிக்க
மணமும் தந்து மனமும் மகிழ்கின்றது

இறைவனை நினைத்து அவன் நினைவோடு ஒன்றி தொழுவது
மறைந்து விடும் மேகங்கள் சிறிது நேரம் நின்று மழையைக் கொட்ட அதில் நனைந்து மகிழ்வது
எழுதியது எதிர்பாராமல் பத்திரிகையில் வந்ததால் அதனை மற்றவரிடம் காட்டி மகிழ்வது
தேர்வில் ,போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றதால் அடுத்தவர்கள் நம்மை பாராட்டுவதால் மகிழ்வது
குழந்தைகளுக்கு புதிய பொருட்களை கடையில் வாங்கிக் கொடுப்பது

மற்றவருக்குத் தெரியாமல் வெட்க உணர்வோடு திருமணமான புதிதில் மனைவிக்கு மல்லிகை வாங்கிக் கொடுத்து மகிழ்வது ,மற்றும் மகிழ்விப்பது
புதிய நண்பர்கள் நல்லவர்களாக அமைந்துப் போவதால் அவர்களை சந்தித்து மகிழ்வது
நமது புன்னகை முகத்தை கண்டு மற்றவர்களும் மகிழ்ந்து புன்னகைப்பது
காதல் வயப்பட்டு காதலியை கண்டு மகிழ்வது
பார்க்காத நாடுகளை பார்த்து மகிழ்வது
வாழ்கைக்கு உற்சாகம் தரும்

No comments:

Post a Comment