Saturday 21 June 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்

"நல்ல பொருள் உபயோகமாக இருக்கும் அதனை வாங்குங்கள்" என்று மனைவி சொல்ல
"பணம் இல்லை" நான் விளக்க .
"ஆமா நான் விரும்பி கேட்டாதான் பணம் இருக்காது" என்று மனைவி கோபம் அடைய .
"சரி என்ன செய்வது பணத்திற்கு"
"கடன் வாங்கியாவது வாங்குங்கள்" .
ஒ.கே வாங்கிடுவோம்

பொருள் வாங்க பணம் போதாது என்பது நம் பெண்களுக்கு தெரிந்தால் நல்லது குடும்பம் நலமாக ஒற்றுமையாக இருக்க சில நேரங்களில் கடன் வாங்கியும் வாங்க வேண்டிய கட்டாயம் .
எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் எந்திரங்கலாக மாருவது இயற்கை,
மனையிவின் முகம் மலர்வதில் பார்ப்பதில் தனி சுகம் கிடைக்கும்.
பணம் வரும் போகும் நமக்கு மனைவியின் மகிழ்வுதான் முக்கியம் .
அழகாய் இன்புற்று வாழ வழிவகுக்கும் .
வல்லமைப்படைத்த இல்லாள் இல்லை என்றால் ஏது இல்லம்!
எல்லாவற்றையும் தந்து அரவணைத்து போகும் அவளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதனை கொடுத்து விட வேண்டியது மகிழ்வுதான்.

No comments:

Post a Comment