Tuesday 24 June 2014

நினைவாற்றலுக்கு மனப் பயிற்சியும் அவசியம்.

அறிவு தொடர்ந்து கற்பதின் வழியாகவே அறிவின் ஆற்றல் மேன்படும் .கற்பதை நிறுத்த நினைவு ஆற்றல் குறையும். குழந்தைகளுக்கு மனனம் செய்யும் பயிற்சி நினைவு ஆற்றலை வளர்க்கிறது .வயதானவர்களுக்கு நினைவு சக்தி குறைவது இயல்பு .
உடல் நலம் பேணுவதும் ,ஆரோக்கியமான உணவு( மீன் உணவு நல்லது ) தொடர் உடற் பயிற்சியும், 'எதையும் நினைவில் வைத்துக் கொள்வேன்' என்ற மன உறுதியும் இருத்தல் வேண்டும். சிலர் ஒன்றை வைத்து ஒன்றை நினைவு படுத்திக் கொள்வர் .
உடற் பயிற்சி உடலுக்கும் நினைவு ஆற்றல் சக்திக்கும் உதவும்.
சிறு வயதில் மனனம் செய்வது உதவி இருக்கலாம் வளர்ந்தவர்களுக்கு தானே ஆக்கப் பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் .கவனக் குறைவு ,தவறான எண்ணங்கள், கவலையான நினைவுகள் ஞாபக மறதியை உண்டாக்கும்

நினைவாற்றலுக்கு மனப் பயிற்சியும் அவசியம்.
நாம் அமைதியாக இருக்கும்போது நம் வீட்டில் எத்தனை ஜன்னல்கள் ,வாசற்படிகள் உள்ளன, நமது தெருவில் எத்தனை வீடுகள் உள்ளன, நமது நண்பர்களின் பெயர்கள் நினவு கொள்வது, நமது கடந்த கால இனிய நிகழ்வுகளை மனதில் கொண்டு வருவது, மனம் விட்டு மகிழ்ந்து சிரித்து பேசுதல் போன்றவைகளும் நம் நினைவு ஆற்றலை வளர்க்க உதவும். மன அழுத்தம் நினைவு ஆற்றலை குறைக்கும்

மனித மூளையின் செல்கள் அறிவைத் தூண்ட பன்மடங்காக பெருகுகின்றது.

சரியான தூக்கமின்மை அல்லது குறைவான தூக்க நேரம் நினைவாற்றலை குறைக்கின்றது

பாவமான காரியங்களானது, மனிதனின் உள்ளத்தில் ஞாபக மறதியை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் (எனது ஆசிரியரான) வகீஉ இடத்தில் என்னில் காணப்படும் ஞாபக மறதி பற்றி முறையிட்டேன். (அதற்கவர்) பாவமான காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுமாறும், நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவு ஒளிமயமானது என்றும், அது பாவியான ஒருவனுக்குக் கொடுக்கப்படமாட்டாது என்றும் கூறி உபதேசித்தார்.”

No comments:

Post a Comment