Wednesday 17 September 2014

பாசங்களை பகிர்வதில் வெளிப்படை தன்மை வேண்டும்

குழந்தைகளாக இருக்கையில்
பெற்றோர்கள் பாசங்களை
வெளிப்படையாக காட்டினார்கள்

வளர்ந்த பின்
பெற்றோர்கள் பாசங்களை
வெளிப்படையாக காட்டுவதில்லை
பாசத்த்தை மனதில் நிறுத்தி
தவறு செய்தால் தண்டித்தார்கள்

பெரியோர் ஆன பின்
பெற்றோர்கள் தண்டித்ததுதான் மிகைத்து நிற்கின்றது
குழந்தைகளாக இருக்கையில்
பெற்றோர்கள் காட்டிய பாசங்கள் மறைந்து விடுகின்றன

இரு காலங்களிலும்
பெற்றோர்கள் காட்டியது பாசங்கள்தான்
பாசங்கள் பாவாங்களல்ல பாபங்களுமல்ல

பெற்றோர்கள்
நன்மைகளை நாடி கண்டித்ததை
தவறாக மனதில் பதியப் படுகின்றன
தவறாக மனதில் நின்றமையால்
பெற்றோர்கள் முதியோர்கள் ஆனா பின்
முதியோர்களை மதியா மனம் வந்தடைகின்றது

குழந்தையானாலும்
வளர்ந்தவனாலும்
கண்டிக்கும் முறைகளை
பாசங்களை வெளிப்படையாக தெரியும் வண்ணம்
அரவணைத்து அறிவுரைகள் தந்து
நண்பனாக
தத்துவங்கள் தருபவனாக
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டுபவனாக
பெற்றோர்கள் எக்காலத்திலும் இறுத்தல் சிறப்பைத் தரும்

 

No comments:

Post a Comment