Monday 15 September 2014

உன் படம் வேண்டாம்

உன் படம் வேண்டாம்
நீயே என் உள்ளத்தில் பதிந்து விட்டாய்

உனது கனிந்த கரங்களால் அணைத்துக் கொள்
உனது மென்மையான் உதடுகளால் கன்னத்தில் முத்தங்கள் கொடு
உனது உள்ளங் கைகளால் தலையில் தடவிக் கொடு
உனது மனதின் இசையால் உறங்கச் செய்து விடு

நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லி விடு
நான் உன்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்

உனது அளவற்ற வாழ்த்துகள்
எனக்கு சிறப்பான வாழ்வைத் தரும்

உலகத்தில் பெற்ற அழகுகள் அனைத்தும்
உன்னால் நான் பெறப் பட்டவைகளே

அம்மா அணைத்துக் கொள்
அம்மா உன் அரவணைப்பில்
நான் உறங்க விரும்புகின்றேன்

அம்மா உன் மடியிலேயே சுவனம் உள்ளது
அம்மா உன் மடியிலேயே சுவனத்தின் சொத்துக்கள் நிறைந்துள்ளன

அம்மாவின் நினைவில் அவர்களுக்காக
அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டாத நாட்களில்லை

அம்மா மனதிலேயே உறைந்துவிட்டதால்
அம்மாவை மறந்தாலல்லவா
அம்மாவை நினைப்பதற்கு 

No comments:

Post a Comment