Monday 22 September 2014

எது குறைந்தாலும் எனக்கு உறக்கம் வராது

 
 
நான் நடுவில் படுத்துக் கொள்வேன்
எனக்கு இரு பக்கமும் இரண்டு பாசமானவர்கள்
நான் இவர்கள் என்னோடு உறங்குவதால் மகிழ்வடைகின்றேன்
எனக்கு இவர்கள் தரும் உணர்வுகள் நிறைவைத் தருகின்றன

ஒருத்தி இங்கும் அங்கும் அசைந்தாலும்
ஒருவர் ரீங்கார குறட்டை விட்டாலும்
அவர்கள் இருவரும் என்னை அணைத்து உறங்குவர்
இவைகள் எனக்கு பழகிப் போனது
இவைகளில் எது குறைந்தாலும்
எனக்கு உறக்கம் வராது

குழந்தையான மகளையும்
ஒன்றிவிட்ட கணவனையும்
ஒதுக்கி விட்டு என்னால் எப்படி உறங்க முடியும் !

No comments:

Post a Comment