Monday 27 April 2015

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க'


பதினாறும் பெற்றதாய் பெருமை பேசுவார்
பதினாறில் பெண்மகள் பெறவில்லையே யென வேதனைப் படுவார்

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று
பெருமக்கள் திருமணத்தில் வாழ்த்திச் சென்றனர்

பதினாறில் நன்மக்களும் ஒன்றாகி நிற்க
நன்மக்களைப் பெற்றெடுத்தாலும்
நன்மக்களில் ஒரே ஒரு பெண்மகள் இல்லாமற் போனது
நன்மக்களை பெற்றதில் நிறைவில்லாமல் போனது

மனைவியாக பெருமையாக வந்தாள்
பெருமையாக வந்தவள்
பொறாமைப் படுகிறாள்
தானொரு பெண்மகளைப்
பெறாமல் போனதற்கு

பெண்ணின் அருமை
பெற்றவளுக்கும் தெரியும்
பெண்ணோடு வாழ்ந்தவனுக்கும் தெரியும்
Mohamed Ali

No comments:

Post a Comment