Monday 24 February 2014

மனதில் பட்டதை பட்டென சொல்வேன்

பெற்ற அறிவு இறைவன் தந்தது
இறைவன் தந்த அறிவை பூட்டி வைக்க மாட்டேன்
அறிவை சொல்லிக் கொடுக்க காப்புரிமை நாட மாட்டேன்
பெற்ற அறிவு கொடுக்க மற்றவருக்கு கசக்கவும் செய்யும்
பெற்ற அறிவைக் கொடுப்பதில் எனக்கு இனிக்கச் செய்கிறது
சுவை மாறுபடுவது போல்
ரசிப்பதிலும் மாறுபாடு இருக்கவே செய்யும்

கொடுப்பதை கொடுத்து விடுகிறேன்
பிடிப்பதை எடுத்துக் கொள்ளட்டும்
வேண்டாததை ஒதுக்கி விடட்டும்
விரும்பி கொடுப்பவரை ஒதுக்க வேண்டாம்
அவர் அறிந்ததை கொடுத்தார் யென நினைக்கட்டும்
நாம் செயல்படுவது நன்மையாக அமையட்டும்
பெரிய மனது படைத்தோர் பெருந்தன்மையோடு செயல் படட்டும்

விரும்பியதை சொல்லி விடுவேன் .
மனதில் மறைத்து வைக்க முடியாது
மறைக்க வேண்டியதை மறைப்பேன்
மறைக்க வேண்டியது மறைக்க செய்வேன்
மறைக்க வேண்டியதை மறைப்பது கடமை மற்றும் அவசியம்

1 comment: