Monday 24 February 2014

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்


வாய்க்கு வந்த வார்த்தைகளை
வரும் வழியில் வந்தவரிடம் சொல்லி வைத்தேன்

சொல்லிய வார்தைகள்
உண்மைக்கு புறம்பானது

தெளித்த வார்தைகள்
காற்றில் பறக்கும் இறகுகள் போல் பறந்து போயின

கேட்டவர்கள் கொளுத்திப் போட்டனர்
கொழுந்தெறியும் தீ பரவி பாதகமானது

அவதூறாக தெளித்த வார்தைகள்
அவமானத்தை பரப்பிச் சென்று பாவத்தை குவித்தன
-------------------------------------
"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".

-திருக்குர்ஆன் 24:23

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.- திருக்குர்ஆன் 2:83

No comments:

Post a Comment