Sunday 20 April 2014

இறைவா ! எங்களுக்கு நற்குணங்கள் கொண்டவரை எங்கள் நாட்டை ஆளும் தலைவராகக் கொடு

இறைவா

எங்களுக்கு நற்குணங்கள் கொண்டவரை
எங்கள் நாட்டை ஆளும் தலைவராகக் கொடு

நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய ஞானத்தை எங்களுக்கு கொடு
நல்ல தலைவராக வருபவர் மனித நேயம் கொண்டவராக இருக்கச் செய்

இனவெறி கொண்டவனை
பிரித்தாளும் எண்ணம் கொண்டவனை
பொய்யை பரப்பச் செய்பவனை
பெண்களுக்கு மோசம் செய்பவனை
மோசடி செய்பவனை
குழப்பம் செய்பவனை
தன் இனத்துக்கு
தன் குடும்பத்திற்கு மட்டும் ஆதாயம் தேடுபவனை
எங்களுக்கு தலைவனாக ஆக்கி விடாதே

நீயல்லால் யார் எங்களுக்கு உதவுவார்
நீயல்லால் யாரிடம் நாங்கள் உதவி நாடுவோம்
நீயே உயர்ந்தவன்
நீயே கருணையாளன்
நீ நினைப்பதுதான் நடக்கும்
உன்னிடமே உதவியை நாடுகின்றோம்
இறைவா ! எங்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்
இறைவா ! கொடுங்கோலன் ஆட்சிக்கு வராமல் எங்களை காபந்து செய்
ஆமீன்

 
-முகம்மது அலி ஜின்னா

No comments:

Post a Comment