Wednesday 16 April 2014

நான் உன்னை நேசிக்கின்றேன்

என் கருத்துக்கு மாறுபடுகிறாய்
உன் கருத்துக்கு நான் மாறுபடுகின்றேன்

உன் கொள்கை வேறு
என் கொள்கை வேறு

உன் கொள்கையில் உனக்கு பிடிப்பு
என் கொள்கையில் எனக்கு பிடிப்பு

உன் கொள்கையை என்னை ஏற்றுக் கொள்ள நீ வற்புறுத்தவில்லை
என் கொள்கையை உன்னை ஏற்றுக் கொள்ள நான் வற்புறுத்தவில்லை

உன்னால் யாருக்கும் தொல்லை இல்லை
என்னாலும் உனக்கு தொல்லை இல்லை

உலகில் பல நிறங்களில் மலர்களை கண்டு மனமகிழ்கின்றேன்
உலகில் பல கருத்துகளைக் கொண்ட மக்களைக் காண அதியக்கின்றேன்

உலகின் பல்வகை மக்களை படைத்தவன் இறைவன்
உலகில் ஒரே வகையில் அனைத்துமிருந்தால் வாழ்வில் விருப்பம் வர நாட்டம் வராது

உலகில் ஒரே சுவை இருந்தால் உண்பதற்கும் தேட்டம் வராது
உண்பதற்கு தேட்டம் அற்றுப்போக உடல் கெட்டுப் போகும்

மனைவியும் கருத்தில் மாறுபட்டவள்தான்
மனைவியும் பெற்றோர் விரும்பியதால் மணமுடிக்கப் பட்டவள்தான்

பழகப் பழக விரும்பாதவளும் விரும்பியவளானாள்
ஒதுங்கி நின்றிருந்தால் ஒதுங்கிப் போயிருப்பாள்

உறவு இருவரையும் மேன்மைப் படுத்தியது
உறவு ஒருவரை ஒருவர் அறிய வைத்தது

உறவை நாடாதவன் உள்ளதையும் இழப்பான்
உறவை நாடுபவன் விட்டுக் கொடுப்பான்

உறவை நாடுபவன் எதிரியாக யாரையும் நினையான்
விரோதம் ஒருநாள் பனிக்கட்டிபோல் கரையும்
விரோதம் போக பாசம் வரும்

பாசம் இறைவன் கொடுத்த அருளில் ஒன்று
இறைவன் கொடுத்த அருளில் ஒன்றையும் நான் இழக்க விரும்பவில்லை

நான் உன்னை நேசிக்கின்றேன்
நீயம் இறைவனால் படைக்கப் பட்டவன்

No comments:

Post a Comment