Friday 4 April 2014

எங்கிருந்தாலும் வாழ வாழ்த்துகின்றேன்


காயப் படுத்திவிட்டு கடந்து விட்டாய்
காயப் படுத்தியதால் என்னை பலப்படுத்தி விட்டாய்

நேயமாக்கிக் கொண்டவளாய் இருந்த காலத்தில்
மனதை வலுப்படுத்தி விட்டாய்

தனித்து விட்டுச் சென்றாய்
மனதில் தேடலை உருவாக்கினாய்

எங்கும் எவ்விடத்திலும் எந்நேரமும் உன்னோடு இருப்பது இயலாது
இருப்பினும் எந்நேரமும் என்னுள்ளத்தோடு இருந்து கொண்டிருக்கிறாய்

வாழ்த்தினை விட்டுச் செல்லவில்லை
வாழ்த்துவதை மனதில் நிறுத்தி வைக்கின்றேன்

பிறை காண உன்  புருவம் நினைவு வரும்
காணாத காத தூரம் நீ சென்றாலும்
கனவிலும் பிறையிலும் உனைக் காண மகிழ்கின்றேன் 
எங்கிருந்தாலும் நீவாழ வாழ்த்துகின்றேன்

No comments:

Post a Comment