Thursday 3 April 2014

விட்டுக் கொடுக்கும் மனமில்லையெனில் அனைத்தும் விலகிப் போகும்

ஒருவர் போட்டார் ஒரு போடு
அவர் எங்கள் ஊர்

அவர் போட்டது
நேரில் பார்த்து பழகிய பின்பு
ஃ பேஸ்புக் ரிகுஸ்ட் பற்றி சிந்திப்பாராம்

அவருக்கு நான் போட்ட ஒரு போடு கீழ்

நேரில் பார்க்கவில்லை
போனில் பேசியதுண்டு
படத்தில் பார்த்ததுண்டு
முகநூலில் முதல் காட்சி
மனதில் நிற்கும் காட்சி

நேரில் பாராமல்
படத்தில் பார்த்து
ஃ பேஸ்புக்கில் ரிகுஸ்ட் தடை
பிறந்த ஊர் வரும்போது
நேரில் பார்த்து பழகிய பின்பு
ஃ பேஸ்புக் ரிகுஸ்ட் பற்றி
மனதில் நினைவு வர
கலந்து ஆய்வு செய்வோம்
அதுவரை அன்பான வாழ்த்துகள்
-------------------------------
யார் முதலில் பழகுவது !
நட்பு வருவது எப்போது !
நீ பேசினால்தான் நான் பேசுவேன்
இப்படியே இருந்தால்
எப்பொழுது காதல் மலர்வது
விதை ஊன்ற செடி வளரும்
நீர் ஊற்ற வேர் வளரும்
செடி வளர மலர்கள் பூக்கும்
மலர்கள் பூக்க பழங்கள் கிடைக்கும்

பாசமும் நட்பும் பழகிய பின்தான்
விட்டுக் கொடுக்கும் மனமில்லையெனில்
அனைத்தும் விலகிப் போகும்

காதல் வளர
சேர்தல் உருவாகும்
சேர்ந்த பின் மக்கட் தொகை பெருகும்
உலகம் படைக்கப் பட்டதே நமக்காக
நாம் இணையாமல் இருக்க
உலகம் உருளாது

மற்றொருவர் தொலைபேசி எண் கேட்டு பேசியபின்தான் ஃ பேஸ்புக் நண்பராவாராம்
நான் அவருக்கு தவறான தொலைபேசி நம்பரை கொடுத்தேன்
நீங்கள் உண்மையானவர் அல்ல என்றார்
உண்மையை அறிய மற்றொரு நம்பரை கொடுத்தேன் அவர் நல்ல மனிதராக இருப்பதால்
அவர் பெயர் Jabbar Arasar Kulam
இப்பொழுது அவர் இந்தியா வந்தபோது என்னை தேடி வீட்டுக்கே அவரது அம்மாவையும் அத்தாவையும் அழைத்துக் கொண்டு வந்தார்

அவர்கள் வந்தபோது எனது மனைவி மட்டும் இருந்ததால் அவரது தாயார் அடுப்பங்கரை வேலையில் தானே ஈடுபட்டு அனைத்து சமையல் உதவிகளும் செய்தார்கள் .உணவு சாப்பிட்ட தட்டைகளையும் கழுவ விரும்பினார்.எனது மனைவி தடுத்து விட்டார்.அந்த அம்மையாருக்குத்தான் எத்தனை உயர்ந்த உள்ளம் .மறக்க முடியவில்லை அவர்களது குடும்ப உறவுகளை.

மனம் நெகிழ்ந்து போனோம் நாங்கள்
ஃ பேஸ்புக் நட்புதான் குடும்ப உறவையும் எற்படுத்தியது .
ஃ பேஸ்புக் உலகளவில் நல்ல நட்புகளை எனக்கு கொடுத்துள்ளது .
நாம் பயன் படுத்துவதில் அதில் உள்ளது
நோக்கத்தை வைத்தே அனைத்தும்

மக்காவிலிருந்து ஹிஜ்ரது மதினாவிற்கு போனவர்களில் பலருக்கு பல நோக்கம் .பெண்ணை நாடி சென்றவர்களுக்கு பெண் கிடைத்தது .நன்மையை நாடி நாயகத்தோடு சென்றவர்களுக்கு நன்மை கிடைத்தது

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் - 1)
--------------------------------------------------------------------------------------------
நோக்கத்தை வைத்தே அறுவடையின் பலனும்

நோக்கத்தை வைத்தே செயலின் தேடல்
நோக்கத்தை வைத்தே செயலின் முடிவும்

நாட்டை விட்டு போனான் நாலுகாசு சேர்க்க
நாட்டை விட்டு போனவனுக்கு வீட்டு நினைவு வர

தொடுத்த நோக்கம் தொலைந்து விட
யெடுத்த செயலில் தொய்வு விழுந்தது

கல்வி கற்க சென்றவன் கசடை அள்ளி வந்தான்
பொருள் சேர்க்க சென்றவன் பொருளை விட்டு வந்தான்

மரம் வெட்ட போனவன் மனிதனை வெட்டி வந்தான்
நோக்கம் அற்று போனவன் நேயத்தை அழித்து வந்தான்

காதல் கொண்டவர் நேசத்தை வைத்து காதல் வசப்பட்டார்
காதல் காரண காரியத்தை வைத்து வருவதில்லை

காமம் மிஞ்சியவனுக்கு காதல் வர வாய்பில்லை
காதல் அற்ற நிலையில் கன்னியை கலங்க வைப்பவன் காமுகன்

வளர்ப்பு முறை தவறாய் இருக்க
வாழும் முறையும் தவறாகி விட வாய்புண்டு

அம்பை எய்தவன் ஒருவனிருக்க
அம்பை நோவதேன்

தாய் தந்தையை மறந்தவனுக்கு தன்னிலை பெரிதானது
தனக்கும் அந்நிலை வர தாய் தந்தை நிலை அறிய வரும்
----------------------------------------------

No comments:

Post a Comment