Saturday 3 January 2015

பாசம் அறியா தொடர்புகள்

உன்னைக் கண்டித்து வளர்த்தேனே !
என்னைக் கண்டித்ததால்தான் கெட்டுப் போனேன்

உன்னைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினேன்
என்னைப் பெற்றதால் அது உனது கடமையானது

உனக்கு உரிமை கொடுத்து நீ காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேனே
எனது உரிமையை தடுத்தால் உன்னை ஒதுக்கி திருமணம் செய்துவிடுவேன் என்ற பயம் உனக்கு

ஏன்! இப்படியெல்லாம் பேசுகின்றாய் !
உன் அப்பனிடம் நீ பேசியதைப் பார்த்து நான் கற்றுக் கொண்டதுதான் 
*****************************

 கல்லறையில் அடைக்கப் படவில்லை
இதயத்தில் இதமாக குடி புகுந்து விட்டாய்

உமைப் புதைத்து கல்லறையில் அடைக்கலமாக்கி
உமக்கு இறைவனது அருள்வேண்டுமென ஓதி புலம்புகின்றனர் இறைவனிடத்தில்
இறக்கும் வரை இறைவனது அருள் நாடி நின்ற உமக்கு
இருக்கும் வரை உம்மை கண்டும் காணாமல்
உம் விழிகளில் வேதனையால் கண்ணீர் வழியச் செய்திட்டோர்

No comments:

Post a Comment