Friday 27 December 2013

இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை

மின்னல் போல் மகிழ்வுகள் வரும்
மழை போல் சோகங்கள் கொட்டும்

மின்னலைக் காண விழிகள் மூடும்
மகிழ்வுகள் வர தன்னிலை மறக்கும்

மின்னலும் நீடிப்பதில்லை
மகிழ்வுகளும் நீடிப்பதில்லை

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே


மகிழ்வுகள் வரும் முன்னே
சோகங்கள் தொடரும் பின்னே

மகிழ்வு வர துள்ளுகிறோம்
துயரம் வர துவளுகிறோம்

ஒடித் திரிகிறோம்
ஓய்ந்து விடுகிறோம்

பிறப்பும் இறப்பும் உண்டு
இன்பமும் துன்பமும் வாழ்வில் உண்டு

இனபதிலேயே இருந்தவரும் கிடையாது
துன்பத்திலேயே துவண்டவரும் கிடையாது

அவரைப் போல் நாம் இல்லையே என்று நினைப்பார்
இவரும் அவரும் அப்படியே நினைத்து ஏங்குவர்

இறையோடு ஒன்றியவர்க்கு
இன்பமும் துன்பமும் சமநிலை

No comments:

Post a Comment