Monday 23 December 2013

யார் அறிவார் நம் நிலை


யார் நல்லவர்
யார் கெட்டவர்
யார் அறிவார்
யாவையும் இறைவனே அறிவான்

நல்லவரை கெட்டவரென்றால் கெட்டவராகலாம்
கெட்டவரை நல்லவரென்றால் நல்லவராகலாம்
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் நல்லவைகள் கிடைக்கலாம்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!

துயர் கொடுத்தோர் துவண்டு போகலாம்
தூற்றி சாடுவோர் தொல்லைகள் பெறலாம்
தூற்றுவதும் சாடுவதும் நல்லோர் விரும்பார்
சாபமிடுவதை சான்றோர் விரும்ப மாட்டார்

கெடுதல் தரும் குடியை குடிப்பவனை வெறுக்காதே
கெடுதல் தரும் குடியை வெறுத்து ஒதுக்கு
கெட்டவனையும் நல்லவனாக்க முயற்சி செய்
கெட்டவர் தன்னிலை அறிய தன்னிலையை உய்ர்வாக்கிக் கொள்

கெட்டவர் சூந்த நிலையில் தன்னிலை உயர்த்தி நின்றார் தாஹா நபி
கெட்டவர் மாறும் நிலையில் இறைவன் சொன்னதை சொல்லி உயர்த்தச் செய்தார்
கெட்டவரை ஒதுக்கி வைக்காமல்
கெட்டவரையும் நல்லவராகச் செய்தார் தான் வாழும் வழியால்

வேண்டாம் இந்த வசைபாடுகள்
வேண்டும் இந்த மனித நேயம்
வேண்டும் அறச் செயல்கள்
வேண்டும் சேவைச் செயல்கள்

அறியாதவரை அறியச் செய்
அறியாமல் செய்த தவறுகள் அழிந்து போகட்டும்
அறிந்தும் தவறு செய்தோர் திருந்தி நடக்கட்டும்
அறிந்தவர் தவறு செய்வோரை திருந்த வழி காட்டட்டும்

No comments:

Post a Comment