Monday 3 February 2014

நமக்காக இறைஞ்சு இறைவனை நாம் சேர்ந்து ஓரிடத்தில் வாழ

உனக்கோர் மடல்
உனக்கோர் எளிய அர்ப்பணிப்பு
எளிய அர்ப்பணிப்பு தந்து எழுத
எனக்கு ஊக்கம் தந்தவள் நீயே

ஒவ்வொரு வரியிலும் ஒரு காரணம்
ஒவ்வொரு காரணத்திலும்
ஒவ்வொரு உணர்வுகளை சுமக்கிறது
ஒவ்வொரு சுமையும் உள்மனதின் உந்துதல்

ஒருவளாய் வந்தாய்
ஒரு பகுதியாய் ஒன்றினாய்
ஒன்றை வாரிசை கொடுத்தாய்
மற்றொன்றை வேண்டி வர நிற்கிறேன்
,


என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறாய்
என் வாழ்க்கையில் இயக்கும் சக்தியாய் இருக்கிறாய்
என் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கினாய்
என் வாழ்வு நீ இல்லாமல் நானில்லை என்ற நிலையாக்கினாய்
என் வாழ்வில் நீ உலகில் முழு பிடிப்பினைத் தருகின்றாய் .

நான் தனியாக இருந்து தவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது
நான் தவிக்கும் உணர்வு என் மனோநிலையை பாதிக்கின்றது
நான் விரைவில் உன்னோடு இருக்க இறைவனை இறைஞ்சுகின்றேன்
நான் வேண்டுவதை விட உன் வேண்டுதல் சக்தி பெற்றது

ஒரு இரவு பல இரவாக நகர்கிறது
ஒரு இரவு உன்னோடு இருக்கையில்
ஒரு இரவு அதற்குள் முடிந்ததா!
ஏன இரவு சுருக்கமானது
என இரவை நினைக்க வைக்கும்

உன்னை விட்டு பிரிந்திருப்பது
உன் மீது நேசத்தை கூட்டுகிறது
உன் நினைவால்
என் வலிமை குறைகிறது
உன்னோடிருக்க
என் வலிமை நிறைகிறது

உனக்காக ஏங்குகிறேன்
உனக்காக இறைஞ்சுகிறேன்
நமக்காக இறைஞ்சு இறைவனை
நாம் சேர்ந்து ஓரிடத்தில் வாழ

1 comment:

  1. அழகான அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete