Sunday 4 August 2013

இறைவன் தேவையற்றவன்

இறைவன் தேவையற்றவன்
இறைவனின் அடியான் தேவையுடையவன்
இறைவனின் அடியானுக்கு இறைவனே தேவையுடையவன்
இறைவனே அனைத்தையும் படைத்தான்
இறைவனால் படைக்கப் பட்டவன் இறைவனிடத்தே யாசிப்பான்
இறைவனை யாசிப்பவன் இறைவனையே  தொழுது நிற்கிறான்
இறைவனை தொழுது நின்று யாசிப்பவன் இறைவன் அதனை ஏற்க வேண்டுகிறான்
இறைவனை அருள் வேண்டி இரவெல்லாம் தொழுது ஏங்கி நின்றாலும் இறைவனது அருள் அவன் நாடியவருக்கே கிடைக்கும்
இறைவன் இறக்கம் கொண்டவன்
இறைவனை நாடியவருக்கு இறைவன் நன்மையை தர தயங்குவதில்லை
இறைவன் தருவதும் தராமல் இருப்பதும் நன்மையாகவே அமையும்

'இறைவா! உன்னுடைய படப்பினங்களில் மிகவும் துர்பாக்கிய சாலியாக என்னை ஆக்கி விடாதே!'

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பனூ அஸத் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் வந்து 'யார் இவர்?' என்று கேட்டார்கள். அதற்கு நான் இவர் இரவெல்லாம் உறங்க மாட்டார். தொழுது கொண்டே இருப்பார் என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நிறுத்து! அமல்களில் உங்களால் இயன்றதையே செய்யுங்கள். நிச்சயமாக இறைவன் நீங்கள் சலிப்படையும் வரை சலிப்படைய மாட்டான்' என்று கூறினார்கள்.
 புகாரி ஹதீஸ்1151.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம்இல்லத்திலேயே) அமந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து உஙகளது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உஙகள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 
புகாரி ஹதீஸ் 731.


"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

No comments:

Post a Comment