Monday 23 December 2013

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை!

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

நீ அருளாளன்
நீ பிழை பொருப்பவன்
நீ கருணை கொண்டவன்
நீ உன்னருளை தந்தருள்

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை
நான் உன்னை வாழ்க்கையில் பார்த்ததில்லை
நான் பார்க்காததெல்லாம் உலகில் இல்லாமல் இல்லை
நான் பார்க்காமலேயே உன்னை பின்பற்ற வேண்டும்
நான் தவறான வழிக்கு திரும்பாமல் நீ பாதுகாக்க வேண்டும்
நான் வேண்டும் வழி உன் வழி
நான் வேண்டி தொழுவது உன்னிடமே
நான் நாடும் காவல் உன்வசமே

நான் என்னையே மாற்றிக் கொண்டேன் உன்னை அறிந்து
நான் நன்னிலையில் நிலையாய் நின்று நிறைவாய் வாழ நிறையருள் தந்தருள்

1 comment:

  1. Nice Post Wish you all the best by http://wintvindia.com/

    ReplyDelete