Friday 14 June 2013

கவிஞன்


கவிஞன் காணாததை கவிதையில் சொல்வான்
கவிஞன் கண்டதையும் கவிதையில் சொல்வான்
கவிஞன் காணாததையும் கண்டதையும்  நயமாக சொல்வான்
கவிஞன் கற்பனை  வெள்ளத்தில் நீந்துவான் 

கவிஞனின் பெயரில் ஒளிவு மறைவு இருக்கும்
கவிஞனின் கவிதை கருத்திலும்  உண்மை மறைந்திருக்கும்
கவிஞனின் கவிதை பொய்யால் புனைக்கப்  பட்டதல்ல
கவிஞனின் கவிதை மெய்யால் மிகைப் படுத்தப்  பட்டிருக்கும்

கவிஞன் வார்த்தையால் விளையாடுவான்
கவிஞன் வாய்மையால்  கலைஞனாவான்
கவிஞன் வாழ்த்துவதில் கவிதையாய் தந்து மகிழ்வான்
கவிஞன் வாழ்தப்படுவதில் கவிஞனின் கவிதைகள் மணம் வீசும்

1 comment: